Saturday, 30 November 2013

முகப்பரு

முகப்பருக்களை ,முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை குணப்படுத்தும் -
குங்குமாதி லேபம் -Kumkumadhi Lepam
                                                                                                             
தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                          10 கிராம்
2.            மஞ்சள் ஹரித்ரா                                 5              “
3.            பாச்சோத்திப்பட்டை லோத்ராத்வக்                5              “
4.            கோரைக்கிழங்கு முஸ்தா                        5              “
5.            சித்தரத்தை ராஸ்னா                            5              “
6.            விளாமிச்சம்வேர் உசீர                          5              “
7.            குருவேர் ஹ்ரீவேர                             5              “
8.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  5              “
9.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்5              “
10.          தாழம்பூ மடல் கேதகீ புஷ்ப                      5              “
இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்து அவற்றைச் சிறு கொதி கிளம்பும் அளவிற்குச் சூடாக்கப்பட்ட 160 கிராம் நல்லெண்ணெய்யில் (திலதைல) தூவிச் சிறிது சூடாக்கிப் பின்னர் அத்துடன் தண்ணீர் 640 மில்லி லிட்டர் சேர்த்து ஒரு சிறு கொதி வருமளவிற்குச் சூடு செய்து இறக்கி நன்கு மூடிப் பத்து நாட்கள் வைக்கவும். பின்னர் சரக்குகளைப் பிழிந்தெடுத்து மணம், நிறம் இவைகளுடன் கூடிய எண்ணெய்யைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கவும். இது மூர்ச்சித தைலம்எனப்படும் பிறகு அதைச் சிறிது சூடுசெய்து பிறகு அதைச் சிறிது சூடு செய்து தேன் மெழுகு (மதுச்சிஷ்ட) 40 கிராம் சேர்த்துத் கறைந்தவுடன் வடிக்கட்டிக் கலவையைக் களிம்பு போல் உறையுமளவிற்கு ஆற வைக்கவும்
.
பின்னர் அத்துடன்
1.            சுத்தி செய்த ரஸஸிந்தூரம் ஷோதிதரஸ ஸிந்தூர 2.500 கிராம்
2.            இந்துப்பு ஸைந்தவ லவண                 5.000     “
3.            குங்குமப்பூ குங்கும                        1.000     “
4.            கோரோசனை கோரோசன                  0.125     “
5.            பச்சைக்கற்பூரம் கற்பூர                     8.000     “
6.            கஸ்தூரி கஸ்தூரி                         62.500 மில்லி கிராம்
இவைகளைத் தனித்தனியே அரைத்துப் பொடித்துப் பிறகு ஒன்று சேர்த்தரைத்துக் கலந்து சந்தன தைலம் (சந்தன தைல) 10 கிராம். அத்தர் (அத்தர்) 0.250 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  




பருக்கள் (யௌவன பிடக), மருக்கள் (நீலிகா), முகத்தில் கருமையுடனும் வேறு நிறங்களுடனும் உண்டாகும் வ்யங்கம்என்னும் வட்டங்கள், தோல் நிறமாற்றம் (வர்ணவிகார) மற்றும் முகத்தின் அழகைக் கெடுக்கும் தோல் நோய்கள் (சரும ரோகங்கள்).

               
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. முப்பருக்களை இந்த லேபம் மிகவும் சிறந்த முறையில் குணப்படுத்தும்
  2. இரத்தம் சுத்தம் செய்யும் மருந்துகள் மற்றும் ,உடல் சூட்டை குறைக்கும் மருந்துகளோடு இந்த மருந்தை பயன் படுத்தினால் நல்ல பலன் கிடக்க வாய்ப்புள்ளது

முடி கருக்க



ஜபாபத்ரியாதி தைலம் 
(செம்பருத்தியாதி தைலம்)                             (ref-ஸஹஸ்ரயோகம்)    
 செம்பருத்தி தைலம் செய்வது எப்படி  ?
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            செம்பருத்தி இலை ஜபாபத்ரி     200 கிராம்
2.            கீழாநெல்லி பூ ஆமலகீ          200        
3.            வில்வ இலை பில்வ பத்ர       200        
4.            விருட்சிப்பூ விருக்ஷிக புஷ்ப          200        
5.            அருகம்புல் தூர்வா              200        
6.            வெற்றிலை நாகவல்லி பத்ர          200        
7.            துளசி இலை துளசி பத்ர        200        
8.            ஜாதிமல்லி இலை மாலதி பத்ர  200        
9.            அவுரி இலை நீலி பத்ர          200        

இவற்றை நன்கு இடித்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய் (நாரிகேள தைல) 800 கிராம், தேங்காய்ப் பால் (நாரிகேள க்ஷீர) 800 கிராம், நன்கு விழுதாக அரைத்த

10.          அதிமதுரம் யஷ்டீ              33 கிராம்
11.          சீரகம் ஜீரக                     33          
12.          கருஞ்சீரகம் கிருஷ்ணஜீரக       33          

ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து காய்ச்சிப் பதத்தில் வடிகட்டவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சிரங்கு (பாமா), அரிப்பு (கண்டு), கரப்பான் (விஸர்ப்ப) போன்ற தோல் நோய்கள் (சர்ம ரோக), முக்கியமாக குழந்தைகளின் மேற்கூறிய நிலைகளில் மிகச் சிறந்தது. தலைப் பொடுகுக்கு (சிரகண்டு) இதனைப் பயன்படுத்துவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆயுர்வேதத்தில் செய்யபடும் இந்த செம்பருத்தி தைலமும் -சித்த முறைப்படி செய்யப்படும் செம்பருத்தி தைலமும் ஒன்றல்ல
  2. பொடுகுக்கு -துர்துற பத்ராதி தைலம் + வெட்பாலை தைலம் + இந்த தைலம் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்
  3. இந்த தைலம் -தோல் வியாதிகளிலும் நல்ல பலன் தரும்

பித்த வெடிப்பை குணமாக்கும்

பித்த வெடிப்பை குணமாக்கும் -ஸிந்தூராதி லேபம் -Sindooraadhi Lepam
                                                                                               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வங்க ஸிந்தூரம் கிரிஸிந்தூர          20 கிராம்
2.            ரஸ கற்பூரம் (பூரம்) ரஸகற்பூர        10          
3.            ரஸ ஸிந்தூரம் ரஸ ஸிந்தூர         10          
4.            மிருதார்சிங்கி ம்ருத்தார ஸ்ருங்க      20          

இவைகளை வங்க ஸிந்தூரம் நீங்கலாகத் தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் வங்க ஸிந்தூரத்தையும் சேர்த்து ஒன்றாக அறைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல  400 கிராம்
2.            தேன் மெழுகு மதுச்சிஷ்ட              100        
இவைகளைக் கொண்டு தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சேற்றுப்புண்  பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண), படை (விஸர்ச்சிகா), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), பித்த வெடிப்பு எனப்படும் கால்களிலேற்படும் பித்தவெடிப்பு (விபாடிகா), இரணம் (வ்ரண), அரிப்பு.

 தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காலில் ஏற்படக்கூடிய எல்லா வகையான வெடிப்புகள் அது பித்த வெடிப்பானாலும் ,ப்லாண்டார் சோரியாசிஸ் எனப்படும் நோயானாலும் அது இந்த மருந்தால் முற்றிலும் குணமாகும்

புண் ஆற



மேக வேட்டை நோய்களிலும் -பால் வினை நோய்களிலும் பயன்படும் -
தேவகுஸும ரஸாயனம் Devakusuma Rasayanam
(ref-வைத்யகஸப்தஸிந்து - ரஸகற்பூரவிதி)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸகற்பூரம் ஷோதித ரஸகற்பூர     10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக             10          
இவைகளைத் தனியே பொடித்துப் பிறகு இரண்டையும் சேர்த்தரைத்து அத்துடன் நன்கு பொடித்துச் சலித்த

1.            சந்தனம் சந்தன          10 கிராம்
2.            இலவங்கம் லவங்க       10          
இவைகளைச் சேர்த்து அவற்றை 

1.            வேப்பம்பட்டைக் கஷாயம் நிம்பத்வக் கஷாய
2.            புங்கம்வேர்க் கஷாயம் கரஞ்ஜத்வக் கஷாய
3.            கீழாநெல்லிச்சாறு பூஆமலகீ ஸ்வரஸ
4.            முருக்கன் பட்டை கஷாயம் பலாசத்வக் கஷாய
இவற்றால் அரைத்து அத்துடன் மேலே கூறிய சாறுகளில் ஏதாவதொன்று விட்டுத் தனியே அரைத்தெடுத்து குங்குமப்பூ (குங்கும) 10 கிராம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றுபட நன்கு அறைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் கஸ்தூரி (கஸ்தூரி) 2.500 கிராம் சேர்த்தரைத்து 50 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.
அளவும் அனுபானமும்:      
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை ஒன்று முதல் மூன்று வேளைகள் தேன், பால் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: 
 பரங்கிப் புண்ணின் (பிரங்கரோக உபதம்ஸ), பலவித நிலைகள், நாட்பட்ட பலவித தோல் நோய்கள் (புராணத்வக் ரோக), குதிகால் வாதம் (வாத ரக்த), கீல்வாயு (சந்திகாதவாத) போன்ற வாத நோய்கள் (வாத ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பால் வினை நோய்களிலும் -இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
  2. நாள்பட்ட ஆறாத புண்களிலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. மறைவிடங்களில் வரும் புண்களில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்

=

சீத பேதி

கழிச்சலை குணபடுத்தும் -லசுனாதிவடி   Lasunadhi Vati                                                           
  (ஆதாரம் -லோலம்பராஜீயம் - விக்ஷூசிகாசிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            தோல் நீக்கிக் கல்வத்திலிட்டு நன்கு
       அரைத்து விழுதாக்கிய பூண்டு / லசுன             10 கிராமுடன்
2.            சீரகம் – ஜீரக                                     10 கிராம்
3.            சுக்கு – சுந்தீ                                     10           “
4.            திப்பிலி – பிப்பலீ                                 10           “
5.            மிளகு – மரீச்ச                                   10           “

இவைகளை நன்கு பொடித்துச் சலித்த சூர்ணம்

6.            சுத்தி செய்த கந்தகம் (பொடித்தது) – ஷோதித கந்தக      10           “
7.            இந்துப்பு (பொடித்தது) – ஸைந்தவ லவண                10           “
8.            பால் பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) – ஹிங்கு     10           “

இவற்றைச் சேர்த்து நன்கு கலந்த அரைத்துப் பின்னர் அவற்றை எலுமிச்சம்பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) கொண்டு ஏழு நாட்கள் அரைத்துப் பதத்தில் 200 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
குறிப்பு:    எலுமிச்சம்பழச்சாறுக்கு பதில் வேப்பம் பட்டைக் கஷாயம் உபயோகிப்பதும் உண்டு.

அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகளுக்கு வெந்நீர் அல்லது மோருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 


பேதி (அதிஸார)பெருங்கழிச்சல் (க்ரஹணீ)வாந்திபேதி (விஷூஸிகா) எனும் காலராபசியின்மை (அக்னிமாந்த்ய)வயிற்றுப்புசம் (ஆனாக) மற்றும் பலவித ஜீரணக் கோளாறுகள்இந்நிலைகளில் இது அஜமோதார்க்க அல்லது கற்பூராத்யர்க்கத்துடன் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
1. சீத பேதி முதல் -புட் பாய்சன் வரை -கிராணி கழிச்சல் முதல் -காலரா வரை -பேதிக்கு நல்ல பலன்  தரும் மருந்து இது 

டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்கள்

பத்து நிமிடத்தில் காய்ச்சலின் வெப்பம் போக்கும் -காலகூட ரஸ-(kAALKOOTA RAS)
(ref-பஸவராஜீயம் - ஸன்னிபாதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           30 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக       50           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.           சுத்தி செய்த மனோசிலை (பொடித்தது) ஷோதித மனசில   60 கிராம்
4.            தாமிர பற்பம் தாம்ரபஸ்ம                              40           “
5.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) டங்கண பஸ்ம      70           “
6.            சுத்தி செய்த தாளகம் (பொடித்தது) ஷோதித ஹரிதாளக  90           “
7.            பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) ஹிங்கு           10           “
8.            சுத்தி செய்த நாபி (குறிப்பிட்டுள்ள சாறுகளில் ஒன்று சேர்த்து
அரைத்து விழுதாக்கியது) ஷோதித வத்ஸநாபி         120         “

இவைகளையும் நன்கு பொடித்துச் சலித்த

9.            கொடிவேலி வேர் சித்ரக                                90           “
10.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்        100         “
11.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்       100         “
12.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                      100         “
13.          சுக்கு சுந்தீ                                           120         “
14.          மிளகு மரீச்ச                                        120         “
15.          திப்பிலி பிப்பலீ                                      120         “
16.          வசம்பு வச்சா                                        10           “

இவைகளின் சூரணமும் சேர்த்து நன்கு கலங்க அரைத்துப் பின்னர்,

1.            இஞ்சிச்சாறு ஆர்த்ரக ஸ்வரஸ
2.            கொடிவேலிவேர் கஷாயம் சித்ரக கஷாய
3.            எலுமிச்சம் பழச்சாறு ஜம்பீர ஸ்வரஸ
4.            பூண்டுச்சாறு லசுன ஸ்வரஸ
5.            குந்துமணி வேர் கஷாயம் குஞ்ஜாமூல கஷாய
6.            முருங்கப்பட்டை கஷாயம் சிக்ருத்வக் கஷாய
7.            எருக்கன் வேர் கஷாயம் அர்க்கமூல
8.            கலப்பைக் கிழங்குச் சாறு லாங்லிஸ்வரஸ
9.            சிறு செருப்படைச் சாறு ஹம்ஸபாடீஸ்வரஸ
10.          நொச்சியிலைச் சாறு நிர்க்குண்டீஸ்வரஸ
11.          வெற்றிலைச் சாறு நாகவல்லி பத்ர ஸ்வரஸ
12.          அழிஞ்சில் வேர்ச் சாறு அங்கோலமூல ஸ்வரஸ
13.          முருங்கை வேர்க் கஷாயம் சிக்ருமூல கஷாய
14.          பஞ்சகோல கஷாயம் பஞ்சகோல கஷாய
15.          பெருபஞ்சமூல கஷாயம் மஹாபஞ்சமூல கஷாய

இவைகளைத் தனித்தனியே உபயோகித்து ஒவ்வொன்றைக் கொண்டு மூன்று மணி நேரம் அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    

இதை மிகுந்த கண்காணிப்புடன் உபயோகிக்க வேண்டும்

அளவும் அனுபானமும்:     

ஒரு மாத்திரை வீதம் இரு வேளைகளுக்கு இஞ்சிச் சாற்றுடன் அல்லது சுக்குக் கஷாயத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 
டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் (ஜ்வர), ஜன்னி , இரைப்பிருமல் (தமகச்வாஸ), அமிர்தாரிஷ்ட, தசமூலாரிஷ்ட அல்லது கிராதாரிஷ்டத்துடன் இதனைச் சேர்த்துத் தருவது வழக்கம்.

தெரிந்த கொள்ள வேண்டிவை 
  1. பத்தே நிமிடத்தில் எந்த காய்ச்சலின் வெப்பத்தையும் வெகு வேகமாக குறைக்கும் அற்புத மருந்து 
  2. காய்ச்சல் எந்த நோயினால் வந்திருந்தாலும் இந்த மருந்து அறுபத மருந்து 
  3. சர்வ காய்ச்சல் நிவாராணி இது 

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...