ஆ
உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்
தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர்.
ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும்,
ஒரு
சிலருக்கு எப்பொழுதாவது வரும்.
ஒரு சிலருக்கு காலையில் வரும்.
ஒரு
சிலருக்கு மாலையில் வரும்.
ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும்.
ஒரு
சிலருக்கு இருபுறமும் வரும்.
ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும்.
ஒரு
சிலருக்கு பின் மண்டையில் வரும்.
ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும்.
ஒரு
சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும்.
ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும்.
ஒரு
சிலருக்கு பனியில் நடந்தால் வரும்.
ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும்.
ஒரு
சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும்.
ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும்.
ஒரு
சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும்.
வந்தால்
மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக
சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல
நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்-கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.