Saturday, 30 November 2013

தைராய்ட் நோய்க்கு நிரந்தர தீர்வு --


தைராய்ட் நோய்க்கு நிரந்தர தீர்வு --


தைராய்டு நோய்கள்

                வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள் இந்த நாளமில்லா சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான  பணிகளை செய்கிறது, கட்டுப்படுத்துகிறது. பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.

தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபா; தைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
உடல் எடை கூடுதல் /குண்டாகுதல்
உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்)
உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோ, உடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட)
     அதிகமான, சத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்    

குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்பிற்கும் குறைவு)
அதிகமான, வேகமான நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்பு
அதிகமான உடல் சோர்வு, களைப்பு
கை, கால், நடுக்கம், பதட்டம் 

முறையற்ற மாதவிலக்கு
மாதவிலக்கு இல்லாதிருத்தல் மிக குறைவான மாதவிலக்கு   

குறைவான வியர்வை 
மிக அதிகமான வியர்வை 
அதிமான தூக்கம், சோர்வு
தூக்கமின்மை


மலச்சிக்கல்    
அடிக்கடி மலம் கழித்தல், அதிகமான குடலின் அசைவுத்தன்மை  
மன அழுத்தம்
பய உணர்வு, கோப உணர்ச்சி

அதிகமாக முடி கொட்டுதல், முடி வறண்டு போதல், சரும வறட்சி  
அதிகமாக முடி கொட்டுதல்

அதிகமான குளிர் உணர்தல்
அதிகமான உஷ்ணம் உணர்தல்
அதிகமான உடல் சதை வலி, சதை பிடிப்பு, சதை இறுக்கம், வலிகள் அதிகமாக இருத்தல்
உடல் சதை பலஹீனம்    

நினைவாற்றல் குறைதல், பாலுணர்ச்சி குறைதல்

இரத்தத்தில் TSH அளவு அதிகமாயிருத்தல்
இரத்தத்தில் T3 அளவு அதிகமாயிருத்தல்    



                               

                மேலும் தைராய்டு நோயினால் இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடுதல், ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை ஏற்படுதல், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் உண்டாக தைராய்டில் ஏற்படும் நோய்கள் காரணமாக அமையும். குழந்தையின்மைக்கு தைராய்டு நோய் முக்கியமான காரணமாக அமைகிறது.
               
                தைராய்டு நோய் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். முறையாக, தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ, சித்த ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

                ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம், ஹம்ஸபாதி கசாயம், பிருஹத் கட்பாலதி கசாயம், குக்குலுதிக்க கசாயம், காஞ்சனார குக்குலு மாத்திரை, ஷட்தர்ணம் மாத்திரை, சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம், முட்சங்கன், தேள் கொடுக்கு இலை போன்றவைகளும்

                ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம், நேட்ரம் மூர், ஸ்பான்ஜியா, அயோடம், பிட்யூட்டரினம் , லெசித்தின், அகோனைட். பல்சேட்டிலா, சைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும். ஆங்கில மருந்துகள் சாப்பிடும் போது ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுவதில் தவறில்லை டென்சனை குறைப்பதும், தியான மன அமைதிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதும், ர்ம சிகிச்சைகளை மேற்கொள்வதும் தைராய்டு நோய் குணப்படுத்தலாம்.

                தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

தைராய்டை பற்றிய எனது மற்ற கட்டுரைகள் படிக்க -கீழே இணைப்பை பயன்படுத்தவும்

முடி வளர -முடி கருக்க - அணு தைலம்

முடி வளர -முடி கருக்க - அணு தைலம் 
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் ஸூத்ரஸ்தானம் - நஸ்யவிதி)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கீரைப்பாலை ஜீவந்தி                         12.500 கிராம்
2.            குருவேர் க்ருஷ்ண உசீர (அ) ஹ்ரிவேர           12.500       
3.            தேவதாரு தேவதாரு                            12.500       
4.            கோரைக்கிழங்கு முஸ்தா                        12.500       
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்                  12.500       
6.            விளாமிச்சம்வேர் உசீர                          12.500       
7.            நன்னாரி ஸாரிவா                              12.500       
8.            சந்தனம் சந்தன                               12.500       
9.            மரமஞ்சள்பட்டை தாருஹரீத்ரா                  12.500       
10.          அதிமதுரம் யஷ்டீ                              12.500       
11.          கோரைக்கிழங்கு முஸ்தா                        12.500       
12.          அகில்கட்டை அகரு                             12.500       
13.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரிதகீ பலத்வக்   12.500       
14.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 12.500       
15.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                  12.500       
16.          நாமக்கரும்பு -                                      12.500       
17.          வில்வவேர் பில்வமூல                          12.500       
18.          ஆம்பல் கிழங்கு உத்பல கந்த                    12.500       
19.          கண்டங்கத்திரி கண்டகாரீ                       12.500       
20.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                       12.500       
21.          ஈச்சம்வேர் பரூசக                              12.500       
22.          ஓரிலை ப்ரிஸ்னி பார்ணீ                        12.500       
23.          மூவிலை சாலிபர்ணீ                            12.500       
24.          வாயுவிடங்கம் விடங்க                         12.500       
25.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரீ                   12.500       
26.          ஏலக்காய் ஏலா                                12.500       
27.          அரேணுகம் அரேணுக                           12.500       
28.          தாமரைக்கேஸரம் பத்மகேஸர                   12.500       

                இவைகளை 35.000 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கஷாயமாகக் காய்ச்சி 3.500 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதைப் பத்து சமபாகங்களாக்கவும்.

1.            அவ்விதம் பங்கிடப்பட்ட கஷாயம்      350 மி.லி.
2.            சுத்தமான நல்லெண்ணெய் திலதைல  350 கிராம்

                இவைகளைக் கலந்து காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டவும். இவ்விதம் ஒன்பது பங்கு கஷாயங்களைக் கொண்டு அதே அளவு எண்ணெயை ஒன்பது தடவை மடக்கிக் காய்ச்சிப் பத்தாவது பங்குடன் 350 கிராம் ஆட்டுப் பாலுடன் (அஜக்ஷீர) சேர்த்துக் காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
தயாரிக்கும் முறையில் உள்ள நுணுக்கங்கள் 

வரீஎன்று தண்ணீர்விட்டான் கிழங்கையும், “குஷ்டஎன்று ஜாதிக்கோஷ்டத்தையும், “கிஞ்சல்கடி கமலாத் பலாம்என்று தாமரைக் கேஸரம், சித்தாமுட்டி வேர் இவைகளையும் கிரகிப்பது உண்டு.
        
9  ஆவர்த்தங்களில் எண்ணெயை இறக்கி வடிகட்டாது வற்ற வற்றக் கஷாயத்தைச் சேர்த்துச் சேர்த்துக் காய்ச்சிப் பத்தாவது ஆவர்த்தத்தில் மட்டுமே இறக்கி வடிகட்டுவதும் உண்டு.
             
பத்தாவது ஆவர்த்தத்தில் எண்ணெய்யின் அளவில் நான்கில் ஒரு பங்கில் மேற்கூறிய கஷாயச் சரக்குகளையே கல்கமாக்கிச் சேர்த்துக் காய்ச்சுவதும் உண்டு.

               
சம்பிரதாயத்தில் கஷாயச் சரக்குகளை எண்ணெய்யின் எடைக்குச் சமபாகமாக அமைத்துப் பத்துப் பங்குகளாக்கி ஒவ்வொரு பங்கைக் கொண்டும் முறைப்படி அவ்வப்பொழுது கஷாயமும், கல்கமும் தயார் செய்து 10 ஆவர்த்திகள் செய்யப்படுகின்றன. முழுவதையும் கஷாயமாக்கி அதை 10 ஆவர்த்தம் முடியும்வரை கெடாமல் காப்பதில் உண்டாகும் பிரச்னைகளை உத்தேசித்து இந்த முறை அனுசரிக்கப்படுகிறது.

                

 பயன்படுத்தும் முறையும் அளவும்:    

 

5 முதல் 10 துளிகள் நசியமிட அதாவது மூக்கில் இடும் சொட்டு மருந்தாக (நஸ்ய) பயன்படுத்தப்படுகிறது.


                 
தீரும் நோய்கள்:  


தலை, மூக்கு, தொண்டை போன்ற கழுத்துக்கு மேற்பட்ட உறுப்புகளில் தோன்றும் நோய்கள் (ஊர்த்வஜத்ருகாத ரோக), தோல் வறட்சி (த்வக்ரூக்ஷய), நரை (பாலித). தொடர்ந்து உபயோகிக்க புலன்கள் கூர்மையாவதுடன் நரையும் நீங்குகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆயுர்வேதத்தில் உயிர் நாடியான பஞ்சகர்மா என்னும் உடலை சுத்தம் செய்யும் ஐந்து வகை விஷயங்களில் நஸ்யம் என்னும் மூக்குதுளி சிகிச்சை தலைக்கு மேல் உள்ள எல்லாவகையான நோய்களுக்கும் சிறந்த ஒன்று ..இந்த பஞ்சகர்ம சிகிச்சைகளை பற்றி அடுத்து விரைவில் பார்க்கலாம் ..
  2. இந்த அணு தைலம் என்ற மருந்து மருந்து அனுதினமும் நாம் பயன்படுத்தினால் -முடி கொட்டாமல் ,முடி நரைக்காமல் ,கண் பார்வையை தெளிவாக்கி கண்ணாடி அணியாமல் ,புலன் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் கொடுத்து ,தைராய்ட் வராமல் தடுத்து ,முக சுருக்கங்களை வர விடாமல் தடுத்து என்றும் இளமையாக வைக்க உதவும் ..
  3. காலை கடமைகளில் தினமும் பல் விளக்குவது மட்டும் தான் இப்போது செய்கிறோம் (சிலர் அதை கூட செய்வதில்லை -பெட் காபி குடிக்கிறார்கள் ),ஆனால் கண்ணுக்கு அஞ்சன மை ,மூக்குக்கு எண்ணை,தலைக்கு எண்ணை வைப்பது என்று ஆயுர்வேதம் தினமும் செய்ய சொல்கிறது ..
  4. இந்த அணு தைலம் -பல தலை சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்து ..

முடி கருக்க,முடி வளர மட்டுமல்லாமல் பல நல்ல பலன்களை இந்த நஸ்ய சிகிச்சை செய்யும்
குறிப்பு -இந்த மருந்தை மூக்கில் எண்ணை விடும் -மூக்கு துளி சிகிச்சையாக -நஸ்ய சிகிச்சையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் 

தைராய்ட் நோயை குணப்படுத்தும் -காஞ்சனார குக்குலு

தைராய்ட் நோயை குணப்படுத்தும் -காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU)
(சாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த குக்குலு ஷோதித குக்குலு      1037.5 கிராமை

சுத்தமான நீருடன் கொதிக்க வைத்துக் கரைத்து வடிகட்டிக் காய்ச்சிப் பதத்தில் நன்கு பொடித்துச் சலித்த


2.            மந்தாரைப்பட்டை காஞ்சனாரத்வக்    500 கிராம்
3.            திரிபலை (வகைக்கு) த்ரிபலா         100         “
4.            திரிகடு (வகைக்கு) த்ரிகடு            50           “
5.            மாவிலிங்கம் வருணமூல            50           “
6.            ஏலக்காய் ஏலா                      12 ½       “
7.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       12 ½       “
8.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         12 ½       “

இவைகளைச் சேர்த்து நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

1 முதல் 2 மாத்திரைகள் வரை கொட்டைக் கரந்தைச் சூர்ணம், கருங்காலி க்ஷார சூர்ணம், கடுக்காய்ச் சூர்ணம் அல்லது வெந்நீருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



குன்மம் (குல்ம), கண்டமாலை (கண்டமால), அபசீ, அற்புதம், கிரந்தி எனப்படும் பல விதமான விபரீதமான கழலைகளும், புற்று நோய்களும், புண்கள் (வ்ரண), நெறிகட்டுதல், ஆசன வெடிப்பு (பகந்தர), யானைக்கால் (ஸ்லீபாத), தோல்நோய்கள் (குஷ்ட), பொதுவாக வலியுடன் கூடிய எந்த வீக்கத்திலும் நிவாரணமளிப்பது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. ஹைப்போ தைராய்ட் என்னும் -தைராய்ட் குறைவாக சுரக்கும் நோயை -ஆங்கில மருந்தான எல்ட்ராக்சின்  என்னும் மருந்தை விட நன்றாக வேலை செய்யும் மருந்து இது ..
  2. இந்த மருந்து தைராய்ட் சுரப்பியின் வேலையை சரி செய்யும் 
  3. தைராய்ட் வீக்கம் -கட்டிகள் அனைத்தையும் தக்க துணை மருந்த்துகளோடு  தர சீக்கிரம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணம் ஆகும் 
  4. ஹோமியோ மருந்தோடு இந்த மருந்தை கொடுத்து வர (NAT MUR,THYRODIUM,IODUM...) சீக்கிரம் நல்ல பலன் தரும் 
  5. ஆங்கில மருந்தை போல் ஆயுசுக்கும் இந்த மருந்தை சாப்பிட தேவை இல்லை 
  6. சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரமும் இந்த மருந்தும் -நல்ல இணை மருந்துகள் ..
  7. ஆங்கில மருந்துகள் தைராய்டுக்காக எடுத்து கொண்டிருப்பவர்கள் -நன்கு படித்த -நல்ல அனுபவ அறிவும் உள்ள ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படியே ஆங்கில மருந்தை நிறுத்தி இந்த மருந்தை எடுத்தல் அவசியம் 

தைராய்ட் நோயை குணப்படுத்தும் –சீதாப்பழ இலை குடிநீர்

தைராய்ட் நோயை குணப்படுத்தும் –சீதாப்பழ இலை குடிநீர் ..
சித்த மருத்துவத்தை உலகறிய செய்யும் ..சித்த மருத்துவ துளிர் என்ற அமைப்பு ஆற்றும் தொண்டு அளப்பரியது ...இந்த அமைப்பில் உள்ள மருத்துவ குழு பல வருட ஆராய்ச்சிக்கு பின் தைராய்ட் நோயில் அதிக தைராய்ட் சுரப்பான ஹைப்பர் தைராரய்டிசம் நோய இந்த சீதாபழ இலை குடிநீர் நன்றாக வேலை செய்து ..முற்றிலுமாக வேலை செய்கிறது என்பது அதிசய உண்மை ...இந்த விஷயத்தை ஆணித்தரமாக சொல்லும் அகதீஸ்வரத்தை சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர் ஸ்ரீராம் அவர்களுக்கும் ,அறிஞர் அண்ணா மருத்துவமனையில் வர்ம மருத்துவ பிரிவில் டாக்டர் சித்திக் அலி அவர்களுக்கும் ,எனது மானசீக குரு வைத்ய உஸ்மான் அலி அவர்களுக்கும் நன்றி தனை சொல்ல கடமை பட்டுள்ளேன் ..

தொடர்ந்து பத்து முதல் பதினைந்து சீதப்பழ இலையை நான்கு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு கிளாசாக வற்ற வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் பருக நல்ல பலன் கிடைக்கும் ...இந்த குடிநீர் நாற்பத்து எட்டு நாட்கள் பருகுதலே குணமளிக்கும் ..

குறிப்பு –முறைப்படி BSMS,BAMS  மருத்துவ படிப்பை படித்த மருத்துவரின் ஆலோசனை படி –இந்த குடிநீரை பயன் படுத்துவது நல்லது ..தேவை எனில் அவர்கள் மற்ற துணை மருந்துகளையும் பரிந்துரைப்பார் ..

நெஞ்சு வலி போன்ற கேஸ் ட்ரபுளுக்கு-அக்னிமுக சூர்ணம்



      நெஞ்சு வலி போன்ற கேஸ் ட்ரபுளுக்கு-அக்னிமுக சூர்ணம்-Agni muka choornam
 (ref-பைஷஜ்யரத்னாவளி அக்னிமாந்த்ய சிகித்ஸா)
தேவையான மருந்துகள்:
1.            பெருங்காயம் (பொரித்தது) ஹிங்கு     - 10 கிராம்
2.            வசம்பு வச்சா                         - 20       “
3.            திப்பிலி பிப்பலீ                       - 30       “
4.            சுக்கு சுந்தீ                           - 40       “
5.            ஓமம் அஜமோதா                     - 50       “
6.            கடுக்காய்த்தோல் ஹரீதகீபலத்வக்     - 60       “

7.            கொடிவேலி சித்ரக                  - 70       “

8.            கோஷ்டம் கோஷ்டம்                - 80       “


செய்முறை:    

இந்த சரக்குகளை முறைப்படி பொடித்துச்சலித்து ஒன்றுகலந்து பதப்படுத்தவும்.


அளவு:    

1 முதல் 2 கிராம் வரை 2-3 வேளைகள் உணவுக்கு முன்
அனுபானம்:     மோர், தயிர், வெந்நீர்.


தீரும் நோய்கள்: 

 பசியின்மை (அக்னிமாந்த்ய), செரியாமை (அஜீர்ண), சூலை (சூல), குன்மம் (குல்ம), மலமும் மூத்திரமும் வெளியேறாமல் பந்தனமாவதால் ஏற்படும் வாந்தி, குமட்டல் மற்றும் நெஞ்சு வலியுடன் கூடியநிலை (உதாவர்த்த), இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (ஸ்வாஸகாஸ).

படை ,ஸ்கேபிஸ்,கரப்பான் -தோல் நோய்



படை ,ஸ்கேபிஸ்,கரப்பான்  -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam
 (ref-யோகரத்னாகரம் - பாமா சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
I.             



 1.பாதரஸம் ரஸ                      50 கிராம்
2.     கந்தகம்  - கந்தக                 50           “
கந்தகத்தைக் கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் ரஸத்தைச் சேர்த்து அறைத்து நன்கு கறுத்த கஜ்ஜளி ஆக்கவும்.

II.             

மனோசிலை (மனசில) 50 கிராம் எடுத்துத் தனியே கல்வத்திலிட்டுப் பொடிக்கவும்.


III.         

  1.            சீரகம் ஜீரக                     50 கிராம்
2.            கருஞ்சீரகம் க்ருஷ்ணஜீரக       50           “
3.            மிளகு மரீச்ச                   50           “
4.            மஞ்சள் ஹரித்ரா               50           “
5.            மரமஞ்சள் தாருஹரித்ரா        50           “

இவைகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். பின்னர்

1.            ரஸகந்தக கஜ்ஜளி                         100 கிராம்
2.            பொடித்த மனோசிலை                    50           “
3.            பொடித்துச் சலித்த சரக்குகளின் சூரணம் 250         “
4.            வங்கச்சிந்தூரம்                          50           “
இவைகளை ஒன்று சேர்த்துக் கல்வத்திலிட்டு அக்கலவை நன்கு கருத்துவரும் வரை அரைத்து பத்திரப்படுத்தவும்.

இம்மருந்து வெளி உபயோகத்திற்கானதால் ரஸம், கந்தகம், மனோசிலை இவைகளைச் சுத்தி செய்ய வேண்டியதில்லை.

இம்மருந்தைத் தேங்காய் எண்ணெய், நெய், எலுமிச்சம் பழச்சாறு, இவற்றுடன் கலந்தும் பூசலாம்.

                 
மேற்கூறிய மருந்தைக் களிம்பாகச் செய்து பயன்படுத்த வேண்டுமானால் அதற்காக உபயோகிக்க வேண்டிய சரக்குகளின் விகிதம் பின் வருமாறு அமையும்:
1.            ரஸோத்தமாதிலேப சூர்ணம் 10 கிராம்
2.            தேங்காய் எண்ணெய்        300         “
3.            தேன் மெழுகு              75           “
இவைகளை முறைப்படி சேர்த்துக் களிம்பாக்கவும்.

தீரும் நோய்கள்: 



 சொரி (அ) நமைச்சல் (அ) அரிப்பு (கண்டு), சிரங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) முதலிய நோய்கள் (சரும ரோகங்கள்).


 பயன்படுத்தும் முறை:           

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். லேப சூர்ணமாக இருக்கும் சமயங்களில் தேங்காய் எண்ணெய், நெய் அல்லது எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து மேலே பூசலாம். களிம்பாக இருக்கும் சமயங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் அப்படியே பூசலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கரப்பானுக்கு -இந்த லேபதை -கரப்பான் தைலத்துடன் கலந்து பூச -நன்கு பலன் தரும்
  2. தோல் நோய்களில் -எவ்விதமாக இருந்தாலும் -நல்ல பலன் தரும்
  3. இந்த லேபம் -களிம்பாக இல்லாமல் -சூரணமாக கிடைக்கிறது


மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...