Saturday, 7 December 2013

ஹோமியோ மருந்துகளும் -உறுப்புகளும் ..

ஹோமியோ மருந்துகளும் -உறுப்புகளும் ..


நரம்புகள்                              : ஜெல்ஸ், K.P.6x, M.P.6x
                                              பெல், சிங்கம், குப் அசிடிகம்

மூளை                                              : ஒபியம்

மூளையை மூடிய தோலில்     : ஹெல்லி, பெல்ல

கண்                                       : யூபரே, ஜெல்ஸ், அகோ, பல்ஸடில்லா

காது                                       : சாமோ, பல்ஸ், பெல்ல

நாக்கு                                      : காஸ்டி, மெர்க்

மூக்கு                                       : ஸீபா, செனகா, அமோனியம்பாஸ் 6x, டூக்ரியம்

வாய்                                      : மெர்க், போரக்ஸ், ஆரம்டிரை, நைட் ஆசிட்

பற்கள்                                     : சாமோ, கிரியா, ரூடா C.F6x

நுரையீரல்                           : கார்போ வெஜி

புளுரஸி                               : அகோ, பிரை

ஹார்ட்                                  : காக்டஸ், ஜெல்ஸ்

உமிழ் நீர் சுரப்பி                 : மெர்க்குறி, மெர்க் ஐயோட்

தொண்டை குரல்வளை  : பெல், பைடோ, ஸ்பாஞ்சி, கார்போவெஜி

பிராங்கைக் குழல்             : முதல் கட்டம் பிரை, 2 வது கட்டம் அகோ

ஹார்ட் இரத்த ஒட்டம்                : அகோ, பெல்ல

வயிறு                                               : நக்ஸ், பிரை, அனகார்டி

பைலோரஸ்                                   : கோனி, ஐயோடி

லிவர்                                     : லைக்கோ, சைனா, செலிடோனி

பித்தப்பை                            : கார்டூஸ்மரி, போடோபில், ஐரிஸ்வர், பிரை

பெரிகார்டியம்                                 : கல் பாஸ்

கிட்னி                                               : லைக், டெரி பிந்தினா, பெப்பரிஸ் வல்க் Q,                                                                               சிலிகா 30


நீர் பிரியாமை, நீர் உற்பத்தி
ஆகாமை                              :ஆக்ஸிடென்ரான்,Qஸபால் ஸெர்லேட்Q ஹைட்ராஸ்டிஸ்ஸோயிடேகோQ

பெருங்குடல் புண்             : பைரோஜி

சிறுகுடல் புண்                               : அர்ச்நைட், காலிபைக்

குண்டா இருக்கீங்களா ? - உடல் எடை குறைய நல்ல மருந்து

குண்டா இருக்கீங்களா ? - உடல் எடை குறைய நல்ல மருந்து -நவக குக்குலு Navaka Gugglu
(ref- பைஷஜ்ய ரத்னாவளி - மேதோரோகாதிகாரம்)
தேவையான மருந்துகள்:

1.            சுக்கு சுந்தீ                                     10 கிராம்
2.            மிளகு மரீச்ச                                   10          
3.            திப்பிலி பிப்பலீ                            10          
4.            கொடிவேலிவேர் சித்ரகமூல                           10          
5.            வாயுவிடங்கம் விடாங்க                        10          
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       10          
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     10          
8.            கோரைக்கிழங்கு முஸ்தா                        10          

செய்முறை:      

இவைகளை நன்கு பொடித்துச் சலித்து சுத்தி செய்த குக்குலு (ஷோதித குக்குலு) 90 கிராம் சேர்த்துக் கல்வத்திலிட்டு திரிபலா கக்ஷாயம் விட்டு துண்ணியதாக அரைத்து 500 மில்லி கிராம் மாத்திரைகளாக்கி நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தண்ணீருடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: 


உடல் பருமன் (மேதோவ்ருத்தி (அ) ஸ்தூலதா), உடல் துர்நாற்றம் (சரீர தௌர்கந்த்ய), ஆமவாதம் (ஆமவாத), கீல்வாயு (அ) வாதம் (சந்திகாதவாத), பேராசன நரம்புவலி (க்ருத்ரஸி), நாட்பட்ட புண்கள் (புராணவ்ரண), கொப்பளங்கள், கட்டிகள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கொடம்புளி சூப்புடன் -இந்த மாத்திரையை காலை மாலை இரண்டு சாப்பிட வெகு வேகமாக எடை குறையும் ..
  2. வாரனாதி கஷாயம்  அல்லது வராதி கஷாயம் + இந்த மாத்திரையும் எடை குறைய பயன்படுத்தலாம் ..
  3. மேலே சொன்ன அனுபானம் கிடைக்காதவர்கள் ..திரிபலா கஷாயம் அல்லது  கொள்ளு கஷாயம் கூட நல்ல பலன் தரும்
  4. உடல் குண்டானதால் ஏற்படும் கால் வலி ,வாத நீர்  போன்றவற்றுக்கும் இந்த மாத்திரை வேலை செய்யும்
  5. ஆகாரத்தில் கட்டுப்பாடு ,சரியான உடல் பயிற்சியும் அவசியம் செய்யவேண்டும்

பழுக்காத கட்டிகளுக்கும் ,வலி



பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தேவதாரு தேவதாரு            50 கிராம்
2.            சுக்கு – சுண்டீ                     50          

இவைகளைப் பொடித்துச் சலித்து அத்துடன் தனியே பொடித்துச் சலித்த நவாச்சாரம் (நவக்ஷார) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
                இது நீர்க்கும் தன்மை உள்ளதாகையால் காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை:  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

                 
எலுமிச்சம் பழச்சாறு, மோர் அல்லது சூடான தண்ணீர் இவற்றுடன் கலந்து மேலே பூசலாம்.

தீரும் நோய்கள்:  

ஆரம்ப நிலையிலும், பழுக்கும் நிலையிலும் உள்ள கட்டிகள் (விஷ்போட (அ) வித்ரதி), வீக்கம் (ஸோத), வலி (ருஜா), யானைக்கால் (ஸ்லீபாத).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வீக்கம் சார்ந்த வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிடலாம் ..நல்ல குணம்  தெரியும்
  2. பழுக்காத கட்டிகளுக்கு கஞ்சி தண்ணீருடன பற்றிட சீக்கரம் உடையும்
  3. ஊசி குத்துதல் போன்ற வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிட நல்ல பலன் தெரியும்

பசியின்மையால் வருகிற நோய்

பசியின்மையால் வருகிற நோய்களுக்கு -அக்னிதுண்டீவடீ -Agni thundi vat
  (ref-பைஷஜ்யரத்னாவளி அக்னிமாந்த்யாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

I.        சுத்தி செய்த ரஸம் ஷோதிதரஸ      10 கிராம்
2.      சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக  10          

இவைகளைச் சேர்த்துக் கஜ்ஜளி செய்து அத்துடன்

1.            ஓமம் அஜமோதா                               10 கிராம்
2.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10          
3.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்10          
4.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10          
5.            கொடிவேலி வேர் சித்ரக                         10          
6.            சீரகம் ஜீரக                                     10          
7.            வாயுவிடங்கம்  -  விடங்க                       10          

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம், மற்றும் பொடித்த

II.           

 1.            ஸர்ஜக்ஷாரம் ஸர்ஜக்ஷார             10 கிராம்
2.            யவக்ஷாரம் யவக்ஷார                10          
3.            இந்துப்பு ஸைந்தவலவண            10          
4.            கல்லுப்பு ஸ்வர்ச்ச லவண            10          
5.            சோற்றுப்பு ஸமுத்ர லவண                10          
6.            பொரித்த வெங்காரம் டங்கண சூர்ண   10          
தனித்தனியே சிறிது சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சூர்ண ஆகியன மற்றும்

III.            

1.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்ஸநாபி           10 கிராம்
2.            சுத்தி செய்த எட்டிக்கொட்டை - ஷோதிதவிஷமுஷ்டி 160    
ஆகியவற்றைச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீர ரஸ) கொண்டு நன்கு அறைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் வரை வெந்நீர், எலுமிச்சம் பழச்சாறு, தேன், இஞ்சிச்சாறு அல்லது ஜீரகக் கஷாயத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  


பசியின்மை (அக்னி மாந்தியம்), செரியாமை (அஜீர்ண), ருசியின்மை (அருசி) முதலிய ஜீரணக்கோளாறுகள், பெருங்கழிச்சல் (கிராணி) மற்றும் செரியாமையின் காரணமாக ஏற்படும் காய்ச்சல் (ஆமஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. ஆமம் என்ற செரியாத நிலையால் வரும் நோய்களுக்கு இந்த மருந்தை கொடுத்து ஆரம்பித்தால் நல்ல பலன் தெரியும் ..
  2. அஜீர்ணத்தால் ஏற்படுகிற கிரகணிக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும் ..
  3. இந்த மருந்தை எனது கிளினிக்கில் கொடுத்து நல்ல பலன் கிடைத்துள்ளது ...நான் ஆமவாததிர்க்கும் இந்த மருந்தை பயன் படுத்துவதுண்டு ..

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...