கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு
சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து
செய்யலாம்.
ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான்
சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை.
வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக
அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ,
மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.
முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி
இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான்
எழுந்திருக்க வேண்டும்.
ஒருக்களித்தபடி படுக்கும்
போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில்
இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.
அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க
வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.
அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத்
திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க
வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.
இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை
நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை
ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.
மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து
வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும்
சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.
அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே
யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.
அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம்.
ஆனால் கர்ப்பம் தரித்த
பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.
சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும்
7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும்
தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு
வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.
மேலும், வீட்டில் குனிந்து
நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும்
போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.
தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம்
என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப்
போக்கிக் கொள்ள வேண்டும்.
முதுகு
வலி என்பது இன்று பொதுவாக காணப்படக்கூடிய ஒரு உடல் இயக்க பாதிப்பாகும். இது இன்று
75% பொதுமக்களை பாதிக்கிறது. பொரும்பாலான முதுகு வலி, தசை பிடிப்பு மற்றும் உடலின்
நேர்கோட்டமைப்பில் ஏற்படும் மாறுபாட்டால் வருகிறது.
கீழ்கண்ட குறிப்புகள் முதுகு வலி வராமல் தடுப்பதோடு வலி இருப்பவர்களுக்கு
வலியை குறைக்க உதவுகிறது.
1. எப்பொழுதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான
உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.
2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம்
அமர வேண்டாம்.
3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும்
(அல்லது) தரையில் உறங்கவும்.
4.
நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவும்,
அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.
5. கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள்
இருக்கையை சரி செய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி
செய்யவும்.
6. அதிக எடையை தூக்கும் போது
உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.
7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.
8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க
வேண்டாம்.
9. முதுகு வலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும்.
30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து சில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.
10. கீழ்கண்ட ஏதேனும் அறிகுறிகள்
இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.
1) தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருப்பின்,
2) வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு
பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்,
3) குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்,
4) நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால்
(அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.
ஒரு
பெண்ணிற்கு வாழ்வின் முக்கிய கட்டம் எதுவென்றால், அவள் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த
தருணத்தைக் குறிப்பிடலாம்.
பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை
வெளியேற்றும் அந்த நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது.
தன்
உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களை, கிராமப்புறங்களில் ''பெற்றுப் பிழைத்தவள்'' என்று குறிப்பிடுகிறார்கள்.
பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? பிரசவ நேரத்தின்போது மேற்கொள்ள
வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன? என்பதைக் கீழே காணலாம்.
தயாராகுங்கள்
மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம்
இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் ஊட்ட வசதியாக முன்பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள்,
காலணிகள், குழந்தைக்குத் தேவையான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண்டுகள் போன்றவற்றை மறக்காமல்
எடுத்துச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால்
அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவமனையிலிருந்து
திரும்பியதும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான உடைகள், சோப்புகள், நாப்பிகள்,
துப்புரவுத் துணிகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்களோ,
உங்களை கவனித்துக் கொள்பவரோ கடைக்குச் செல்ல முடியாத நிலையில் இவை கைகொடுக்கும்.
உங்கள் மருத்துவர், மருத்துவமனை, கணவர்,
நண்பர், அவசரத்திற்கு கூப்பிட்டால் ஓடிவரும் உறவினர்கள் போன்றோரின் செல் நம்பர்களை
குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நேரத்தில் அவர்களை அழைப்பதற்கு உதவியாக இருக்கும்.
பிரசவத்தின்போது மருத்துவமனைக்குச் செல்லும் வாகன ஏற்பாட்டையும் தயார் செய்து கொள்ளுங்கள்.
பிரசவத்தின் இறுதி
நேரம்
முதன்முறையாக குழந்தை பெறும்போது பிரசவ
நேரம் பொதுவாக சுமார் பதிமூன்று முதல் பதினான்கு மணி நேரமும், ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால்
சுமார் எட்டு முதல் ஒன்பது மணி நேரமும் நீடிக்கும். கர்ப்பகாலம் முழுவதும் கருப்பையின்
தசைகள் சுருங்கி விரிந்து பிரசவத்திற்குத் தயாராகும். கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில்
இந்த சுருக்கங்கள் அடிக்கடி நிகழும். தொடக்கத்தில் மிகக்குறைந்த அளவிலான தசைச் சுருக்கங்களே
காணப்படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள்
அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும். இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாவே இருக்கும்.
இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம்.
பிரசவ வலி எப்போது எடுக்கும் என்பதை
யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதிகமாக வலி எடுத்தால் சில மருத்துவமனைகளில்
கர்ப்பிணிகளை குளிப்பாட்டுவர். இளஞ்சூடான நீரில் குளித்தால் ஆரம்பகால பிரசவ வேதனையை
சற்று தணிக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.
தாங்க முடியாத வலி ஏற்படும்போது சில
குறிப்பிட்ட வலி நிவாரணிகளை மருத்துவர் தருவார். பேறு காலத்தில் ஏற்படும் வேதனையை நினைத்து
கவலைப்படுவதால் வலி அதிகரிக்கும். எனவே, வலியைக் குறைக்க மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
சுவாசிக்கும்போது மார்பகச்சுவர் விரிவடைந்து, உதரவிதானம் அதிகளவு கீழ் இறங்குவதுதான்
முழுமையான சுவாசம். நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் குழந்தைப்பேற்றின்போது மிகச்சுலபமாக
குழந்தை வெளித்தள்ளப்படும்.
பிரசவ வலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின்
முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதியிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு
வழியாக வெளியேறும். இதற்கு ‘பிரசவத்திற்கு முன்னான கோழைக்கசிவு’ என்று பெயர். இது பசைத்தன்மையுடன்
இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது,
சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து
கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும். இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு
வழியாக தாரைதாரையாக வெளியேறும்.
மருத்துவர் உங்களுடைய நாடித்துடிப்பு,
உடல் வெப்பம், ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதிப்பார். உங்கள் அடிவயிற்றைத் தொட்டு
குழந்தையின் கிடைநிலை, இதயத்துடிப்பு ஆகியவற்றையும் கண்டறிவார். பிரசவத்தில் மொத்தம்
இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது
தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும். வலி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம்
வரும்போதும் கருவை உந்தி வெளியே தள்ள வேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து
முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு
இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல்
2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப்
பிடுங்கி வெளியே போட்டுவிடலாமா என்று எண்ணக்கூடிய நிலையை கர்ப்பிணிகளுக்கு ஏற்படுத்திவிடும்.
கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்தவுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு
நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும். ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின்
தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும். இதனால் குழந்தை யோனிக்குள் தள்ளப்படுகிறது.
யோனித்திறப்பில் குழந்தையின் தலை அரைப்பாகம்
தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க
வேண்டும். இல்லையென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும். தலை
வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக
வெளியே வந்துவிடும். குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை அறுத்துவிட்டு குழந்தையை சுத்தம்
செய்வர். பின்னர் எடை, உயரம் போன்றவற்றைக் கணக்கிடுவார்கள். குழந்தைநல மருத்துவர் வந்து
குழந்தையை பரிசோதித்து குறிப்பு எழுதி வைப்பார்.
சில சமயங்களில் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள்
ஏற்பட்டால், சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள். எல்லா நேரங்களிலும்
சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமில்லை. பனிக்குடத்தில் அதிக நீர் இருத்தல், கருப்பைக்
கோளாறுகள், பிரசவத்தின்போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, குழந்தை தடம் மாறியிருத்தல்,
குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுதல் போன்ற சிக்கலான நேரங்களில் மட்டுமே சிசேரியன்
மேற்கொள்ளப்படுகிறது. மயக்கமருந்து கொடுத்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும்.