Monday, 21 April 2014

"மரு" (Skin Tag) உதிர...

Photo: "மரு" (Skin Tag) உதிர...


இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...


அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.





நன்றி:- இமயகிரி சித்தர்...

சித்தர் வேதா குருகுலம் - திருச்சி.

"மரு" (Skin Tag) உதிர...


இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...



அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

மரபணு மஞ்சள் வாழைப்பழம்:



மரபணு மஞ்சள் வாழைப்பழம்:
-----------------------------------
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.


நோய்களை பரப்பும்:
----------------------------
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.



வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்:-

Photo: வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்:-
வெற்றிலை என்பது இதய வடிவில், வளுவளுப்பாக, பளபளப்புடன் நீண்ட காம்புகளை கொண்டுள்ளதாகும். இந்தியாவில் தமிழ் நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது. வெற்றிலையை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் பலரிடம் இருந்து வரும் பதில் இதுவாக தான் இருக்கும் - "சாப்பிட்ட பின் தெகட்டல் நீங்கி செரிமானம் ஆவதற்கு". ஆனால் அதையும் தாண்டி அதில் பல பலன்கள் அடங்கியுள்ளது. பழங்காலத்தில் இருந்தே இதனை வாசனை ஊக்கியாகவும், வாயுவை தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுரத்தல் மற்றும் இரத்த கசிவு போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பாலுணர்ச்சி ஊக்கியாகும் விளங்குகிறது. வீட்டு சிகிச்சை பலவற்றிற்கும் இது பயன்படுகிறது.
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை :-
வெற்றிலையில் இருந்து வரும் சாற்றில் சிறுநீர்ப் பெருக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் இந்த சாற்றை பாலில் கலந்து குடித்தால், சிறுநீர் கழிவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
அழற்சி :-
கீல்வாதம் மற்றும் விரையழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க வெற்றிலைகள் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் வெற்றிலையின் மேல் விளக்கெண்ணெயை தடவி, அதனை கொப்பளங்கள் ஏற்பட்ட இடங்களில் தடவினால், அவைகள் உடைபட்டு சீழ் வடிந்து ஆறிவிடும். சில மணிநேரங்களுக்கு ஒரு முறை இலைகளை மாற்றியாக வேண்டும்.
கீழ் முதுகு வலி :-
வெற்றிலை அல்லது அந்த இலைகளின் சாற்றை தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்யோடு கலந்து, இடுப்பில் ஒத்தடம் கொடுத்தால், கீழ் முதுகு வலிக்கு நல்ல பலனை அளிக்கும்.
மார்பக பால் சுரப்பதில் உதவும் :-
வெற்றிலைகளை எண்ணெயில் நனைத்து, அதனை மார்பகங்களில் தடவினால், பால் சுரக்க உதவும். அதனால் பால் சுரப்பது அதிகரிக்க இதனை பயன்படுத்தலாம்.
சுவாச கோளாறுகள் :-
இருமல் மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்தால், வெற்றிலையை கொண்டு அவைகளை சரிசெய்யலாம். அதற்கு வெற்றிலையை கடுகு எண்ணெயில் நனைத்து, அதனை நெஞ்சில் தடவுங்கள். இல்லையெனில் நசுக்கிய வெற்றிலை பழங்கள் அல்லது பெர்ரி பழங்களை தேனுடன் கலந்து குடித்தால், இருமலுக்கு நிவாரணியாக விளங்கும்.
நரம்பு தளர்ச்சி :-
வெற்றிலையில் இருந்து எடுக்கப்படும் சாற்றை தேனுடன் கலந்து குடித்தால், நரம்பு பிரச்சனைகள், தளர்ச்சி, ஆற்றலிழப்பு போன்றவைகளுக்கு அவை மருந்தாக விளங்கும்.
தலைவலி :-
வெற்றிலையில் வலி நீக்கும் குணமும், குளிர்ச்சியை உண்டாக்கும் குணமும் உள்ளதால், அவைகளை தலையில் வைத்துக் கொண்டால், எவ்வளவு தலை வலி வந்தாலும், அவை பறந்தோடிவிடும்.
புண்கள் :-
வெற்றிலைகளை சாறெடுத்து, அதனை புண்ணின் மீது தடவி, பின் வெற்றிலையை கொண்டு கட்டிவிடுங்கள். 2-3 நாட்களில் உங்கள் புண் ஆறிவிடும்


வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்:-
வெற்றிலை என்பது இதய வடிவில், வளுவளுப்பாக, பளபளப்புடன் நீண்ட காம்புகளை கொண்டுள்ளதாகும். இந்தியாவில் தமிழ் நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது. வெற்றிலையை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் பலரிடம் இருந்து வரும் பதில் இதுவாக தான் இருக்கும் - "சாப்பிட்ட பின் தெகட்டல் நீங்கி செரிமானம் ஆவதற்கு". ஆனால் அதையும் தாண்டி அதில் பல பலன்கள் அடங்கியுள்ளது. பழங்காலத்தில் இருந்தே இதனை வாசனை ஊக்கியாகவும், வாயுவை தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுரத்தல் மற்றும் இரத்த கசிவு போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பாலுணர்ச்சி ஊக்கியாகும் விளங்குகிறது. வீட்டு சிகிச்சை பலவற்றிற்கும் இது பயன்படுகிறது.
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை :-
வெற்றிலையில் இருந்து வரும் சாற்றில் சிறுநீர்ப் பெருக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் இந்த சாற்றை பாலில் கலந்து குடித்தால், சிறுநீர் கழிவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
அழற்சி :-
கீல்வாதம் மற்றும் விரையழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க வெற்றிலைகள் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் வெற்றிலையின் மேல் விளக்கெண்ணெயை தடவி, அதனை கொப்பளங்கள் ஏற்பட்ட இடங்களில் தடவினால், அவைகள் உடைபட்டு சீழ் வடிந்து ஆறிவிடும். சில மணிநேரங்களுக்கு ஒரு முறை இலைகளை மாற்றியாக வேண்டும்.
கீழ் முதுகு வலி :-
வெற்றிலை அல்லது அந்த இலைகளின் சாற்றை தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்யோடு கலந்து, இடுப்பில் ஒத்தடம் கொடுத்தால், கீழ் முதுகு வலிக்கு நல்ல பலனை அளிக்கும்.
மார்பக பால் சுரப்பதில் உதவும் :-
வெற்றிலைகளை எண்ணெயில் நனைத்து, அதனை மார்பகங்களில் தடவினால், பால் சுரக்க உதவும். அதனால் பால் சுரப்பது அதிகரிக்க இதனை பயன்படுத்தலாம்.
சுவாச கோளாறுகள் :-
இருமல் மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்தால், வெற்றிலையை கொண்டு அவைகளை சரிசெய்யலாம். அதற்கு வெற்றிலையை கடுகு எண்ணெயில் நனைத்து, அதனை நெஞ்சில் தடவுங்கள். இல்லையெனில் நசுக்கிய வெற்றிலை பழங்கள் அல்லது பெர்ரி பழங்களை தேனுடன் கலந்து குடித்தால், இருமலுக்கு நிவாரணியாக விளங்கும்.
நரம்பு தளர்ச்சி :-
வெற்றிலையில் இருந்து எடுக்கப்படும் சாற்றை தேனுடன் கலந்து குடித்தால், நரம்பு பிரச்சனைகள், தளர்ச்சி, ஆற்றலிழப்பு போன்றவைகளுக்கு அவை மருந்தாக விளங்கும்.
தலைவலி :-
வெற்றிலையில் வலி நீக்கும் குணமும், குளிர்ச்சியை உண்டாக்கும் குணமும் உள்ளதால், அவைகளை தலையில் வைத்துக் கொண்டால், எவ்வளவு தலை வலி வந்தாலும், அவை பறந்தோடிவிடும்.
புண்கள் :-
வெற்றிலைகளை சாறெடுத்து, அதனை புண்ணின் மீது தடவி, பின் வெற்றிலையை கொண்டு கட்டிவிடுங்கள். 2-3 நாட்களில் உங்கள் புண் ஆறிவிடும்

பழங்களில் உள்ள சத்துகள்

பழங்களில் உள்ள சத்துகள்

மாம்பழம்

வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.
ஆரஞ்சுப் பழம்

வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.

பப்பாளிப் பழம்


வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.

நெல்லிக்கனி


வைட்டமின் சி 600 மி.கி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ.பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.

கொய்யாப்பழம்

வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.

சாத்துக்குடி

வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.

எலுமிச்சை

கால்ஷியம் 70 மி.கி. வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.

கறுப்பு திராட்சை

வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.

பச்சை திராட்சை

வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.

பேரீச்சம் பழம்

இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.

சப்போட்டா


மாவுச் சத்து 21.4 கிராம், இரும்புச் சத்து 2 மி.கி. உள்ளது. வைட்டமின் ஏ.பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.

வாழைப்பழம்

கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது (116 கலோ¡¢கள்). தவிர வைட்டமின்கள் ஏ.பி.சி உள்ளன. இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.

ஆப்பிள்

வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.

தர்பூசணி


இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.

புளியம் பழம்


இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.

சீத்தாப் பழம்

பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.

அண்ணாசிப் பழம்
இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

மாதுளம் பழம்

பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது

மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் --இய‌ற்கை வைத்தியம்:-


மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் --இய‌ற்கை வைத்தியம்:-


*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.

*கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

*கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

*கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

*கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

*கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.
மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் --இய‌ற்கை வைத்தியம்:-
*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.

*கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

*கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

*கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

*கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

*கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.

முடியை கருப்பாக்கும் கறிவேப்பிலை




முடியை கருப்பாக்கும் கறிவேப்பிலை 
நன்றாக முடி வளர ஆரம்பிக்கும் காலம் என்பதே டீன்-ஏஜ் பருவத்தில் தான். அதேபோல்…. அதிகமாக உணவு, சரியான கூந்தல் பராமரிப்பு என்று அக்கறையோடு இல்லாவிட்டால், ஆறடி கூந்தல் கூட அரையடிக்கும் குறைவாக வந்து நின்றுவிடும்.

* கறிவேப்பிலையைத் துவையலாகவோ பொடியாகவோ உணவில் சேர்ப்பதன் மூலம், இரும்புச்சத்து உடலில் சேர்ந்து, முடியை வலுவாக்கும். எந்த உணவில் கறிவேப்பிலை இருந்தாலும், தூக்கி வீசாமல் சாப்பிடுவேன் என்று முதலில் ஒரு சபதம் போடுங்கள்!
* வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண் சிமிட்ட வைத்திடும்.
* முடி உதிர்வதை உடனடியாக கவனிக்காமல் விட்டால்… கடைசியில் தினம் தினம் `திருப்பதி’ போனது போல ஆகிவிடும் தலை! நல்ல முற்றிய தேங்காயின் துருவல் ஒரு கப் எடுத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். எண்ணெய் தனியாக பிரிந்து வரும். இது தான் கலப்படம் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய். இதைத் தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, வளர்ச்சியும் துரிதப்படும்.
* இளவயதில் வரும் முடி கொட்டுதல், வழுக்கை, நரை போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க… 100 மில்லி தண்ணீரைக்கொதிக்க வைத்து, அதில் ஒரு கப் மருதாணி இலையைப் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். 2 நெல்லிக்காய், 2 பூந்திக் கொட்டையை அரைத்து, மருதாணி தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை தலைக்கு `பேக்’ போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்த ஷாம்பூ அல்லது சீயக்காயினால் அலசுங்கள்.
* வாரத்துக்கு இரண்டு முறை சின்ன வெங்காயம் இரண்டுடன், தேங்காய் துண்டு இரண்டு சேர்த்து அரைத்து வழுக்கையின் மீது பூசுங்கள். பிறகு, கடலை மாவைத் தேய்த்து அலசினால், மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு.

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அதற்கேற்ப நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கிறது. அப்போது, மூளையில் உள்ள ’ஹைப்போதலாமஸ்’ எனும் பகுதி, வியர்வையைப் பெருமளவில் சுரக்கச் செய்து, உடலின் இயல்புக்கு மீறிய வெப்பத்தை வெளியேற்றுகிறது.
இதன் மூலம் உடலின் வெப்பத்தைச் சமன் செய்ய அது முயற்சி செய்கிறது.என்றாலும், அக்னி நட்சத்திர வெயிலின்போது, ’ஹைப்போதலாமஸ்’ தன்னுடைய முயற்சியில் தோற்றுப் போகிறது. அப்போது பல வெப்ப நோய்கள் ஏற்படுகின்றன.
வெப்பத் தளர்ச்சி:
வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு ’வெப்பத் தளர்ச்சி’ (Heat Exhaustion) என்று பெயர்.
என்ன முதலுதவி?
· இந்தப் பாதிப்பு உள்ளவரை நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
· தண்ணீரில் நனைத்த துணியால் உடலை மூட வேண்டும். உடலின் வெப்பம் குறையும்வரை உடலை ஈரப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
· நிறைய தண்ணீரைக் குடிக்கச் செய்ய வேண்டும்.
· ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் உப்பு, 20 கிராம் சர்க்கரை கலந்து அடிக்கடி தரலாம்.
வெப்ப மயக்கம்:
விடுமுறை காலமான கோடையில், சிறுவர், சிறுமிகள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் சிறிது நேரம் விளையாடினால்கூட மயக்கம் வந்துவிடும். அதுபோல், நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள், சாலையில் நடந்து செல்கிறவர்கள் போன்றோர் திடீரென மயக்கம் அடைவதுண்டு.
இது ‘வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு. வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள இரத்த நாளங்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் இரத்தம் தேங்க வழி செய்து விடுகின்றன; இதனால் இதயத்திற்கு இரத்தம் வருவது குறைந்து, இரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான இரத்தம் கிடைப்பதில்லை; உடனே தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது.
முதலுதவி என்ன?
· பாதிக்கப்பட்ட நபரைக் குளிர்ச்சியான இடத்துக்கு அப்புறப்படுத்தவும்.
· குளிர்ந்த தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும்.
· தலையைத் தாழ்த்தி, கால்களை ஒரு அடி உயரத்துக்குத் தூக்கி வைத்துப் படுக்க வைக்கவும்.
· ஆடைகளைத் தளர்த்தி, உடல் முழுவதும் காற்றுபடும்படிச் செய்யவும்.
· மின்விசிறி அல்லது கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யவும்.
· மயக்கம் தெளிந்த பின்னர், குடிக்க தண்ணீர், இளநீர், சர்பத், பழச்சாறு ஏதேனும் தரலாம்.
· இது மட்டும் போதாது. அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய நீர் மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியதும் வரலாம். ஆகையால், உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்கு வழி செய்வது அவசியம்.
சிறுநீர்க் கடுப்பு:
கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகமாகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கியக் காரணங்கள்.
உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள், படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்துவிடும். இதனால் சாதாரணமாக காரத்தன்மையில் இருக்கும் சிறுநீர் அமிலத் தன்மைக்கு மாறிவிடும். இதன் விளைவால் சிறுநீர்க் கடுப்பு ஏற்படும்.
என்ன செய்யலாம்?
· கோடையில் 3 லிருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாகச் சொன்னால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
· எலுமிச்சைச்சாறு, நீர்மோர், இளநீர், ஆரஞ்சு, திராட்சைச் சாறுகள் சாப்பிடவும்.
வியர்க்குருவும் வேனல் கட்டிகளும்
வெயில் ஏற ஏற, வியர்வை அதிகமாகச் சுரக்கும், அப்போது, தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் ’வியர்க்குரு’ வரும். தோலின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ளும். உடனே, அந்த இடம் வீங்கி புண்ணாகும். இதுதான் வேனல்கட்டி.
இதற்கு இப்படிச் செய்யுங்கள்!
· வெயில் காலத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளை குளியுங்கள். மதியம் குளித்தாலும் நல்லது.
· தண்ணீர் பற்றாக்குறை இருந்தால், துண்டை தண்ணீரில் நனைத்து, அடிக்கடி துடையுங்கள்.
· உடலைத் துடைத்துவிட்டு, வியர்க்குரு பவுடர், காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம்.
ஒளி ஒவ்வாமை
வெயில் கடுமையாக பாதிக்கும் போது, சூரியனின் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக தோலில் புகும். இது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. முகத்திலும் உடலின் வெளிப்பக்கங்களிலும் வெப்பப்புண்கள் வரும். அரிப்பு, எரிச்சல், வலி ஏற்படும். இதற்கு ‘ஒளி ஒவ்வாமை’ (Photo allergy) என்று பெயர். இதனைத் தவிர்க்க, வெளியில் செல்லும்போது, ‘சன்ஸ்கிரீன்’ களிம்புகளை முகத்திலும், கழுத்திலும், கைகளிலும் தடவிக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்புக்கு 10 வழிகள்!
தினமும் குறைந்தது இருமுறை குளிக்க வேண்டும்.
· இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக, சிறுவர்கள் கடுமையான வெயிலில் விளையாடக் கூடாது.
· பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
· வெயில் நேரத்தில் குடை பிடித்துச் செல்லலாம்.
· கண்களுக்குச் சூரியக் கண்ணாடியை (Sun glass) அணிந்து கொள்ளலாம்.
· பருத்தி ஆடைகளை அணியுங்கள். அவற்றில்கூட தளர்வான ஆடைகளை அணியவது முக்கியம்.
· தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
· காபி, தேநீர், எண்ணெய்ப் பலகாரங்கள், பேக்கரி பண்டங்கள், காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
· தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடிச் சாப்பிடவும்.
· காலுக்கு ஷூ மற்றும் பிளாஸ்டிக் செருப்புகள் வேண்டாம். மாற்றாக, ரப்பர் அல்லது தோல் செருப்புகளை அணியலாம்.

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...