Saturday, 30 November 2013

அக்குபஞ்சர் மூட்டு வலி

அக்குபஞ்சர் பற்றிய பல கட்டுரைகளை தொடராக எழுத மனம் எண்ணியதுண்டு ..
மூட்டு வலி பற்றி கட்டுரை எழுதும் போது அவசரத்திற்காக வெறும் புள்ளிகளை மட்டும் எழுதுவோமா என்று மனம் அலை பாய்ந்தது ..சரி இப்போது மூட்டு வலிக்கு மட்டும் என்ற குறுகிய நோக்கில் என்னால் அக்குபஞ்சரை அணுக முடியவில்லை என்றாலும் ..வெறும் புள்ளிகளை மட்டுமாவது இப்போது காட்டுவோம் என்று தோன்றியது ..

அக்குபஞ்சருக்கு முன்னோடி வர்ம வைத்தியமே ,சூசி சிகிச்சைகள் என்னும் குத்தூசி வைத்தியமே இதற்க்கு அடிப்படைகள் ..
ஆயுர்வேதத்தில் பஞ்ச கர்மாவில் ரக்த மோக்ஷனம் என்னும் பிரிவில் -பல புள்ளிகளை தற்கால அறுவை சிகிச்சையின் தந்தை எனப்படும் சுஸ்ருதர் பலவற்றை எடுத்து கூறியுள்ளார் ..

அடிப்படை அக்குபஞ்சரை அறியாமல் வெறும் புள்ளிகளை தெரிவது மருந்து பெயரை தெரிந்த மருந்து கடைகாரன் மாதிரிதான் ..நோக்கம் தெரியாமல் குத்துவது..குருட்டு வைத்தியம் எனலாம்.
என்றாலும் மூட்டு வலிக்கு என்ன புள்ளிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற நோக்கில் இந்த புள்ளிகளை வெளிவிடுகிறேன் ..

1.மூட்டில் பசை உண்டாக்கும் குருதெலும்பை வளர்க்கும் எலும்பை வலுப்படுத்தும் -URINARY BLADDER POINT 11 ( UB 11)


மூட்டை சுற்றியுள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் சில ..

யூரினரி ப்ளாடர் பாயின்ட்UB 40,UB 57 -இவை இடுப்பு வலி மற்றும் கால் வலிக்கு பயன் படும் 

சதை வலியை குறைக்கும் பித்தப்பை பாயின்ட் GB 34

வீக்கம் வலிகளை போக்கும் எக்ஸ்ட்ரா பாயிண்ட்கள் 
நேரடியாகவும் மறைமுகமாகவும் வலிகளை குறைக்கும் ஸ்டொமக் வயிறு புள்ளிகள் -ST 34,ST 35,ST 36
எக்ஸ்ட்ரா பாயிண்ட்ஸ் 

ஸ்டொமக் -வயிறு -ST 44
வலிகளை போக்கும் லிவர் -LIVER -LIV 3

கிட்னியின் சீ அல்லது குய் சக்தி குறைபாட்டுக்கு தேர்ந்தெடுக்கபடும் மூட்டு வலி புள்ளிகள் இவை 
மற்றும் பொது படையாக புள்ளிகள் இவை 

ARTHRITIS
P 6
GB 34
GV 14
LI 4 11 15
LV 2
SI 9
SP 5
ST 36
TW 5
BL 8 10 11 58 60

KNEE PAIN
GB 30 33 34 39
GV 12 14
KI 1 10
LV 4 7 8
SI 2
SP 9 10
ST 33 34 35 36
BL 53 54
 

மூட்டு வலிக்கான தொடரை படிக்க ..

மூட்டு வலிக்கான தொடரை படிக்க ..

நிறைய நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ..மீண்டும் அந்த பதிவை இந்த லிங்கை  கிளிக் செய்யுங்கள் ..



  1. இருபது கட்டுரைகள் உள்ளது
  2. மசாஜ் முறைகள் ,தைலம் தேய்க்கும் முறைகள் ,காரணம் ,பத்திய முறைகள் ..பற்றி விளக்கமாக இந்த லிங்கை படித்தால் தெரியும்
  3. நிறைய நண்பர்கள் பாராட்டிய கட்டுரைகள் இவை ..நல்ல பலன் தரக்கொடியது 
கட்டுரைகள் செல்ல லின்கை பயன் படுத்தலாம்
 

வாத ரோகங்கள் (எண்பது வகையான வாத நோய்கள் )- ரோக நிதானம்



வலி (இசிவு ரோகம்) - ரோக நிதானம்



வாத ரக்த ரோக சிகிச்சைகள்

 

ஊரு ஸ்தம்ப ரோக சிகிச்சைகள்



ஆம வாத ரோக (முடக்கு வாத நோய்க்கு ) சிகிச்சைகள்



மூட்டுவலி - ஆயுர்வேதத்தில் முழு நிவாரணம்-தொடர் - 1



மூட்டு வலிக்கு மசாஜ் பாயிட்ன்ஸ் ..



மூட்டு வலிக்கு மசாஜ் கத்துக்கணுமா ?



சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்




மூட்டு வலிக்கு அக்குபஞ்சர் புள்ளிகள் ..



குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-

குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-Tankana choornam
(ref-பாவப்ரகாச நிகண்டு)
தேவையான மருந்துகள்:
வெள்ளைவெங்காரம் ஸ்வேதடங்கண (போதிய அளவு)
செய்முறை:     
வெள்ளை வெங்காரத்தைப் பொரித்துப் பொடித்துச் சலித்துப் பத்திரப்படுத்தவும்.
எளிய முறை 


சட்டியில் இட்டு பொரித்தாலே வெங்காரம் -பொரியும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் ..பொரித்த வெங்காரத்தை எளிதாக பயன்படுத்தலாம்
அளவும் அனுபானமும்:     
200 முதல் 500 மில்லி கிராம் வரை தேனுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்:  
வாய்ப்புண் (அஸ்யபாக), இருமல் (காச) மற்றும் தொண்டையைப் பற்றிய கோளாறுகள் (காந்தரோக). வாய்ப்புண் நீங்க இதை வாயிலிட்டுக் கொப்பளிக்கவும். தேங்காய் எண்ணெயில் குழைத்து இரணங்களுக்கும் போடலாம் அல்லது மேலே தூவலாம். இருமல், ஜலதோஷத்தில் தேனுடன் சேர்ந்து இதனை உள்ளுக்குக் கொடுப்பதுண்டு.
குறிப்பு:    

இதனை டங்கண பஸ்ம என்றும் அழைப்பதுண்டு


வெங்கார பற்பம் -
சித்த ரெபரன்ஸ் -சித்த வைத்திய திரட்டு ,பிரம்மமுனி கருக்கடை -முன்னூறு

செய்முறை -

இதில் வெங்காரத்துடன் கோழி முட்டையின் வெண் கருவை சேர்த்தரைத்து பற்பம் ஆக்கும் முறையில் பற்பம் ஆக்குதல் ...

பயன்


வெங்கார பற்பத்னால் -வெள்ளை என்னும் வெள்ளை படுதல் ,மூத்திர கடுப்பு ,மூத்திர சம்பத்தமான நோய்களான எரிச்சல் ,தடை ,சதை அடைப்பும் போகும்

 குளுமை என்பதற்கு ஒரு பாடல்





ஸ்ரீ குமர குரு பாடலில் வெங்காரம் குளிர்ச்சி என்பதை சொல்கிறது எனபதை பாருங்களேன்




இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார்
கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்
சிங்கிக் குளர்ந்துங் கொலும்



குறிப்பு -முடிந்தால் தமிழ் பாட்டுடன் அடுத்து சித்த மருத்துவ மருந்துகளை எழுதுவேன்









கவனம் தேவை -

ருது உண்டாக்கும் அதாவது மாத விலக்கை வரவழைக்கும் தன்மை கொண்டதால் -மிக்க கவனம் தேவை ..கர்ப்பிணிகளுக்கு பயன் படுத்த கூடாது ..
எனக்கு தெரிந்த வைத்தியர்கள் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலியை உண்டாக்க பயன் படுத்தியுள்ளார்கள் என்பதும் உண்மை (தக்க துணை மருந்துகளுடன் )


தெரிந்து கொள்ள வேண்டியது



  1. நீர் சம்பந்தமான அனைத்து பிரச்சனைக்கும் நல்ல மருந்து
  2. மாத விலக்கு வரவைக்கும் ,மாத விலக்கினால் உண்டாகும் வலிக்கும் நல்ல மருந்து
  3. வாய்புண்ணுக்கு வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க நல்ல பலன் உண்டாகும்
  4. சிறந்த கிருமி நாசினி -புண்களின் மேல் தூவ எளிதில் ஆறாப் புண்ணும் ஆறும்
  5. இருமல் சளிக்கும்,வயிற்றுப் புண்ணுக்கும் தக்க துணை மருந்தோடு தரலாம்

வாய் ,நாக்கு ,பல் சார்ந்த நோய்



வாய் ,நாக்கு ,பல் சார்ந்த நோய்களுக்கு அரிமேதாதி தைலம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - முகரோகாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கருவேலம்பட்டை (பச்சையாக வெட்டி எடுத்தது) –    அரிமேதாத்வக்    5.600 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                                   12.800 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆகக்குறுக்கி வடிகட்டி அத்துடன் 1.600 கிலோ கிராம் நல்லெண்ணெய் (திலதைல) சேர்த்து அதில்,

1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்ட                       12.500 கிராம்
2.            பச்சோத்திப்பட்டை லோத்ராத்வக்           12.500       “
3.            அதிமதுரம் யஷ்டீ                         12.500       “
4.            கருவேலம்பட்டை அரிமேதா               12.500       “
5.            கருங்காலி கதிர                           12.500       “
6.            குமிழ்வேர் காஷ்மரீ                       12.500       “
7.            கொம்பரக்கு லாக்ஷா                     12.500       “
8.            ஆலம்பட்டை வாதத்வக்                   12.500       “
9.            கோரைக்கிழங்கு முஸ்தா                  12.500       “
10.          சிற்றேலம் ஏலா                           12.500       “
11.          கற்பூரம் கற்பூர                           12.500       “
12.          அகில் கட்டை அகரு                      12.500       “
13.          பதிமுகம் பத்மக                          12.500       “
14.          இலவங்கம் லவங்க                       12.500       “
15.          தக்கோலம் தக்கோல                     12.500       “
16.          ஜாதிக்காய் ஜாதீபல                       12.500       “
17.          செஞ்சந்தனம் ரக்தசந்தன                   12.500       “
18.          காவிக்கல் கைரிக                         12.500       “
19.          இலவங்கப்பட்டை லவங்கபத்ரி             12.500       “
20.          சிறுநாகப்பூ நாககேஸர                     12.500       “
21.          காட்டாத்திப்பூ தாதகீ                    12.500       “ 


                இவைகளைக் கற்பூரம் நீங்கலாக அரைத்துக் கல்கமாகக் கலந்து காய்ச்சி மத்தியம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். கற்பூரத்தை எண்ணெய் வடிகட்டும் பாத்திரத்தில் பொடித்துப் போட்டு வடிகட்டும் எண்ணெய்ச் சூட்டிலேயே கரைத்து விடவும்.


              
  பயன்படுத்தும் முறை:       

கண்டூஷம், கவளக்கிரகம் என்ற முறைப்படி வாய்க் கொப்பளிக்க உபயோகிக்கவும். நஸ்ய, சிரோதாரண முறைப்படியும் உபயோகிக்கலாம்.

                
 தீரும் நோய்கள்:  





பல் கூசுதல் (தந்தஹர்ஷ), பல்லாட்டம் 
(தந்தசலன), குழி விழுந்த பற்கள் (க்ருமிதந்த), பற்களின் மேற்பூச்சு (Enamel) சிதைவு, பல்லிலிருந்து சீழும் ரத்தமும் வடிதல் (பூதிதந்த), வாய் துர்நாற்றம் (முகதௌர்கந்த) போன்ற வாய் நோய்கள் (முகரோக), பல்நோய்கள் (தந்தரோக), ஈறு நோய்கள் (தந்தார்வேஷ்த ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. இந்த அரிமேத தைலம் வைத்து வாய் கொப்பளிக்க ,வாயில் வெகு நேரம் வைத்திருந்து -ஆயில் புல்லிங் அதாவது ஆயுர்வேதத்தில் கவளம்,கண்டூஷம் என்பார்கள் (வாய் கொப்பளிக்க ,வாயில் வெகு நேரம் வைத்திருப்பது )செய்ய -வாய் துர்நாற்றம் ,வாய்ப்புண் ,நாக்கில் புண் ,பல்லில் உள்ள கூச்சம் ,பல் நடுக்கம் ,பல் வலி ஆகியவை போய் போய்விடும் ..
  2. வெறும் அந்த நல்லெண்ணெய் இந்த நல்லெண்ணை -ஆயில் புல்லிங் செய்வதை விட இந்த அரிமேத தைலம் வைத்து ஆயில் புல்லிங் செய்வது நல்லது
  3. இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் இந்த ஆயில் புல்லிங் செய்தி வந்தபின்பு நம்மவர்களும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்த ஆயில் புல்லிங் ஒரு holistic treatment என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவத்தினால் நாள்பட்ட நோய்கள்கூடக் கட்டுப்படுகிறது என்பது அனுபவ உண்மை. கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், அது இந்த ஆயில் புல்லிங் தான்.  ஆனால் இது நவீன காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையல்ல. நமது யோகிகளால் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட "கவளம்" என்ற மருத்துவமுறை.  மூலிகைகளினால் காய்ச்சப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு வாய்க்கொப்பளிப்பதற்கு "கவளம்"என்று பெயர். இந்தக் கவளம் நோயின் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்பட்டது.

    ஸ்நேகன கவளம்: இது வாதத்தைத் தணிப்பது.
    சமன கவளம் : பித்தத்தைத் தணிப்பது.
    சோதன கவளம்: கபத்தைத் தணிப்பது.
    ரோபண கவளம்: வாய்ப்புண் மாற்றுவது.

    ஸ்னேகன கவளம் என்பது எண்ணெய்யைக் கொண்டோ, எள்ளை அரைத்துக் காய்ச்சியத் தண்ணீரைக் கொண்டோ வாய்க்கொப்பளிப்பது. வாத நோய்களுக்கும், குறிப்பாக பல் நோய்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும். அரிமேதாதி தைலத்தினால் செய்யப்படும் கவளம் பல் நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    சமன கவளம் என்பது கசப்பு, துவர்ப்பு, இனிப்பு,சுவைகள் சேர்ந்த மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயங்களைக் கொண்டும், குளிர்ச்சி தரக்கூடிய மூலிகைச் சாறைக்கொண்டும் வாய்க்கொப்பளிக்கும் முறை. தேன் கலந்த திரிபலா கஷாயம் இதற்கு எடுத்துக்காட்டு. மன நோய்களுக்கு இது சிறந்தத மருந்து.

    சோதன கவளம் என்பது காரம், புளிப்பு போன்ற சுவைகளையுடைய கஷாயங்களால் செய்யப்படுகிறது. இதனால் சுவை அறியும் திறன் கூடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயன்படும். இஞ்சிக் கஷாயத்துடன் தேன் சேர்த்து சோதன கவளம் செய்யலாம்.

    ரோபண கவளம் அதிமதுரக் கஷாயத்தால் செய்யப்படுவது. இது வாயில் வரக்கூடிய கேன்சரைக்கூட குணமாக்கும் என்ற மருத்துவச் செய்திகளைக் உள்ளது என்பதை அறிந்தால் ஆச்யர்யமடையாமல் நம்மால் இருக்க முடியாது

    இந்த ஆயில்புல்லிங் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.  இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!

    இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம். இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.

    சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது. ஒரு மனிதனுக்கு உமிழ் நீர் ஒழுங்காகச் சுரந்து, கட்டிப்படாமல் நீர்மத்தன்மையுடன் காணப்பட்டாலே ஆரோக்கியம் தானாக வந்துவிடும். "கோதடர்ந்த உமிழ்நீரை முறிய வைத்தால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே" என்பது அஹஸ்தியர் வாக்கு. .பாதி ஜீரணம் உமிழ் நீருடன் கலந்து, மென்று சாப்பிடுவதிலேயே முடிந்து விடுகிறது.உமீழ்நீர்ச்சுரப்பிகளை ,ஆயில்புல்லிங் நன்றாகச் சுரக்க வைக்கிறது

சர்க்கரை நோய்

சர்க்கரை இல்லாமல் இப்போது எந்த உணவுமே இல்லை ...சர்க்கரை சேராமல் பல மருந்துகளில் சிரப்புகள் செய்ய முடியாது ..மருந்துகள் கூட இல்லை என்ற நிலை உள்ளது ...
இந்த சர்க்கரை உடலுக்கு நல்லது தானா ?
வெள்ளை சர்க்கரை இந்த அளவுக்கு உடலுக்கு கேடு ?...

சரி இந்த சர்க்கரை எப்படி தயாரிக்கபடுகிறது ?...



கரும்பில் இருந்து பிழியப்பட்ட சாறுடன் எழு நிலைகளில் பல்வேறு வேதி பொருட்கள் ,அமிலங்கள் பயன்படுத்தப்பட்டு பின்னரே சர்க்கரை உருவாக்கபடுகிறது ...

அம்மோனியா  பை புளுயிடு பாக்டீரியா , பாஸ்போரிக் அமிலம் ,சுண்ணாம்பு நீர் , சல்பர் டை ஆக்சைட் ,பாலி எலக்ட்ரோலைட் ,காஸ்டிக் சோடா ,சலவை சோடா ,சோடியம் ஹைட்ரோ சல்பேட் ..இவ்வாறு எழு நிலைகளில் கரம்பு சாறுடன் வினி புரிகின்ற இந்த நச்சு பொருகள் யாவும் இறுதியில் கழிவாகி  போய் விடுமா ?...என்றால் இல்லவே இல்லை ...

சல்பர் டை ஆக்சைட் ஆர்சனிக் என்று பொருளும் சர்க்கரையுடன் தங்கி விடுகிறது ..அது மட்டுமல்ல வெள்ளை ஆக்க பயன்படுத்தபடும் ப்ளீசிங் வேளையில் சாக்பவுடர், கார்போனிக் வாயு, சல்பர் டையாக்சைட், ஸ்ட்ரோடையம், ஹைட்ராக் சைட், சல்ஃப்யூரிக் ஆசிட் போன்ற பல விதமான ரசாயன பொருட்களின் மீது சர்க்கரை திரவம் உரசிக் கொண்டு போகும் போதுதான், அது ‘பளிச்’சென வெண்மையாகிறது





பாஸ்போரிக் அமிலத்தின் பக்க விளைவு
பல்லின் எனாமல் அரித்தது விடும்'
எலும்பு சீக்கிரம் தேய்வு அடையும் ..
சீக்கிரம் முகத்தில் முதுமை வரும் ...தோல் சுருங்கும்
காஸ்டிக் சோடா பக்க விளைவு
துணி துவைக்கவும் பயன்படும் இந்த வேதிப்பொருள் ..கெமிக்கல் பர்ன் என்னும் எரிச்சலை கொடுக்கும் ...

 செரிமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வயிறில் புண்ணை அல்சரை ,ஜீரண சக்தியை கெடுக்கும் ..வாய்வை உண்டு செய்யும்
 மேலும் பொதுவாக வெள்ளையாக்க பயன்படும் வேதிபோருட்களும் ,சர்க்கரையில் பொதுவாக சேரும் வேதிபோருட்களும் ...


 செரிமான நொதி பொருட்களின் தன்மையை மாற்றி வளர் சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் .
இதனால் செரியாமை ஏற்படும் ..பசி மந்தபடும்

வயிறு பானை போல் வீங்கும்
உடல் தேவைக்கு அதிகமாக குண்டாகும்..
அடிக்கடி சர்க்கரை அளவில் மாறுபாடு உண்டாகி மயக்கம் உண்டாகும்..
வளர் சிதை மாற்றம் உண்டாகும் ..ஹார்மோன் கோளாறுகள் உண்டாகும் ..தைராய்ட் நோய் உண்டாகும் , குழந்தை இன்மைக்கும் காரணமாகும் ,சர்க்கரை நோய் வரும் ..சத்துக்களை உறிஞ்சும் குடல் உறிஞ்சுகள் செயல் இழக்கும் ..மொத்தத்தில் நடை பிணமாக வாழ நேரும்



பல்வேறு  ஆராய்ச்சியாளர்கள் ..பல்வேறு ஆராய்ச்சியின் முடிவாக ..தெளிவாக எடுத்து கூறும் உண்மை இது ...இதை பற்றி ஆராய்ச்சிகள் பற்றி தேவை விவரங்கள் அறிய விரும்புவோர் ..என்னை தொடர்பு கொள்ளலாம் ..இ மெயிலில் தகவல்கள் அனுப்பி தரப்படும் ...


நாம் செய்யவேண்டியவை ....
  1. குழந்தைகளுக்கு சாக்லேட் என்ற பெயரில் இந்த விஷத்தையும் வாங்கி தர வேண்டாம் ..
  2. அரு சுவை உணவில் மற்ற சுவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...
  3. வெள்ளை சர்க்கரைக்கு பதில் ..பனை வெல்லம் ,கருப்பட்டி ,கரும்பு வெல்லம் ,பனங்கற்கண்டு பயன்படுத்துவது நல்லது ..
  4. தேநீரால் நாம் வெள்ளையனுக்கு அடிமையானோம் ...வெள்ளை சர்க்கரையால் இப்போது வெள்ளையன் மருத்துவத்துக்கு அடிமையாவோம் என்பதை மனதில் கொண்டு ...நோயில்லாமல் காப்பதே இந்திய மருத்துவத்தின் கடமை என்பதை சொல்லும் விதமாக ..சர்க்கரை தவிர் ...நோயின்றி வாழ் என்று சொல்வோம் ..
  5. நான் எனது வீட்டில் இப்போது சுத்தமான தேனை இனிப்புக்காக சேர்க்கிறோம் என்பதை தெரிவித்தவனாக ...

தைராய்ட் நோய்க்கு நிரந்தர தீர்வு --


தைராய்ட் நோய்க்கு நிரந்தர தீர்வு --


தைராய்டு நோய்கள்

                வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள் இந்த நாளமில்லா சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான  பணிகளை செய்கிறது, கட்டுப்படுத்துகிறது. பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.

தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபா; தைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
உடல் எடை கூடுதல் /குண்டாகுதல்
உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்)
உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோ, உடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட)
     அதிகமான, சத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்    

குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்பிற்கும் குறைவு)
அதிகமான, வேகமான நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்பு
அதிகமான உடல் சோர்வு, களைப்பு
கை, கால், நடுக்கம், பதட்டம் 

முறையற்ற மாதவிலக்கு
மாதவிலக்கு இல்லாதிருத்தல் மிக குறைவான மாதவிலக்கு   

குறைவான வியர்வை 
மிக அதிகமான வியர்வை 
அதிமான தூக்கம், சோர்வு
தூக்கமின்மை


மலச்சிக்கல்    
அடிக்கடி மலம் கழித்தல், அதிகமான குடலின் அசைவுத்தன்மை  
மன அழுத்தம்
பய உணர்வு, கோப உணர்ச்சி

அதிகமாக முடி கொட்டுதல், முடி வறண்டு போதல், சரும வறட்சி  
அதிகமாக முடி கொட்டுதல்

அதிகமான குளிர் உணர்தல்
அதிகமான உஷ்ணம் உணர்தல்
அதிகமான உடல் சதை வலி, சதை பிடிப்பு, சதை இறுக்கம், வலிகள் அதிகமாக இருத்தல்
உடல் சதை பலஹீனம்    

நினைவாற்றல் குறைதல், பாலுணர்ச்சி குறைதல்

இரத்தத்தில் TSH அளவு அதிகமாயிருத்தல்
இரத்தத்தில் T3 அளவு அதிகமாயிருத்தல்    



                               

                மேலும் தைராய்டு நோயினால் இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடுதல், ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை ஏற்படுதல், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் உண்டாக தைராய்டில் ஏற்படும் நோய்கள் காரணமாக அமையும். குழந்தையின்மைக்கு தைராய்டு நோய் முக்கியமான காரணமாக அமைகிறது.
               
                தைராய்டு நோய் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். முறையாக, தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ, சித்த ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

                ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம், ஹம்ஸபாதி கசாயம், பிருஹத் கட்பாலதி கசாயம், குக்குலுதிக்க கசாயம், காஞ்சனார குக்குலு மாத்திரை, ஷட்தர்ணம் மாத்திரை, சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம், முட்சங்கன், தேள் கொடுக்கு இலை போன்றவைகளும்

                ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம், நேட்ரம் மூர், ஸ்பான்ஜியா, அயோடம், பிட்யூட்டரினம் , லெசித்தின், அகோனைட். பல்சேட்டிலா, சைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும். ஆங்கில மருந்துகள் சாப்பிடும் போது ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுவதில் தவறில்லை டென்சனை குறைப்பதும், தியான மன அமைதிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதும், ர்ம சிகிச்சைகளை மேற்கொள்வதும் தைராய்டு நோய் குணப்படுத்தலாம்.

                தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

தைராய்டை பற்றிய எனது மற்ற கட்டுரைகள் படிக்க -கீழே இணைப்பை பயன்படுத்தவும்

முடி வளர -முடி கருக்க - அணு தைலம்

முடி வளர -முடி கருக்க - அணு தைலம் 
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் ஸூத்ரஸ்தானம் - நஸ்யவிதி)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கீரைப்பாலை ஜீவந்தி                         12.500 கிராம்
2.            குருவேர் க்ருஷ்ண உசீர (அ) ஹ்ரிவேர           12.500       
3.            தேவதாரு தேவதாரு                            12.500       
4.            கோரைக்கிழங்கு முஸ்தா                        12.500       
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்                  12.500       
6.            விளாமிச்சம்வேர் உசீர                          12.500       
7.            நன்னாரி ஸாரிவா                              12.500       
8.            சந்தனம் சந்தன                               12.500       
9.            மரமஞ்சள்பட்டை தாருஹரீத்ரா                  12.500       
10.          அதிமதுரம் யஷ்டீ                              12.500       
11.          கோரைக்கிழங்கு முஸ்தா                        12.500       
12.          அகில்கட்டை அகரு                             12.500       
13.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரிதகீ பலத்வக்   12.500       
14.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 12.500       
15.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                  12.500       
16.          நாமக்கரும்பு -                                      12.500       
17.          வில்வவேர் பில்வமூல                          12.500       
18.          ஆம்பல் கிழங்கு உத்பல கந்த                    12.500       
19.          கண்டங்கத்திரி கண்டகாரீ                       12.500       
20.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                       12.500       
21.          ஈச்சம்வேர் பரூசக                              12.500       
22.          ஓரிலை ப்ரிஸ்னி பார்ணீ                        12.500       
23.          மூவிலை சாலிபர்ணீ                            12.500       
24.          வாயுவிடங்கம் விடங்க                         12.500       
25.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரீ                   12.500       
26.          ஏலக்காய் ஏலா                                12.500       
27.          அரேணுகம் அரேணுக                           12.500       
28.          தாமரைக்கேஸரம் பத்மகேஸர                   12.500       

                இவைகளை 35.000 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கஷாயமாகக் காய்ச்சி 3.500 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதைப் பத்து சமபாகங்களாக்கவும்.

1.            அவ்விதம் பங்கிடப்பட்ட கஷாயம்      350 மி.லி.
2.            சுத்தமான நல்லெண்ணெய் திலதைல  350 கிராம்

                இவைகளைக் கலந்து காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டவும். இவ்விதம் ஒன்பது பங்கு கஷாயங்களைக் கொண்டு அதே அளவு எண்ணெயை ஒன்பது தடவை மடக்கிக் காய்ச்சிப் பத்தாவது பங்குடன் 350 கிராம் ஆட்டுப் பாலுடன் (அஜக்ஷீர) சேர்த்துக் காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
தயாரிக்கும் முறையில் உள்ள நுணுக்கங்கள் 

வரீஎன்று தண்ணீர்விட்டான் கிழங்கையும், “குஷ்டஎன்று ஜாதிக்கோஷ்டத்தையும், “கிஞ்சல்கடி கமலாத் பலாம்என்று தாமரைக் கேஸரம், சித்தாமுட்டி வேர் இவைகளையும் கிரகிப்பது உண்டு.
        
9  ஆவர்த்தங்களில் எண்ணெயை இறக்கி வடிகட்டாது வற்ற வற்றக் கஷாயத்தைச் சேர்த்துச் சேர்த்துக் காய்ச்சிப் பத்தாவது ஆவர்த்தத்தில் மட்டுமே இறக்கி வடிகட்டுவதும் உண்டு.
             
பத்தாவது ஆவர்த்தத்தில் எண்ணெய்யின் அளவில் நான்கில் ஒரு பங்கில் மேற்கூறிய கஷாயச் சரக்குகளையே கல்கமாக்கிச் சேர்த்துக் காய்ச்சுவதும் உண்டு.

               
சம்பிரதாயத்தில் கஷாயச் சரக்குகளை எண்ணெய்யின் எடைக்குச் சமபாகமாக அமைத்துப் பத்துப் பங்குகளாக்கி ஒவ்வொரு பங்கைக் கொண்டும் முறைப்படி அவ்வப்பொழுது கஷாயமும், கல்கமும் தயார் செய்து 10 ஆவர்த்திகள் செய்யப்படுகின்றன. முழுவதையும் கஷாயமாக்கி அதை 10 ஆவர்த்தம் முடியும்வரை கெடாமல் காப்பதில் உண்டாகும் பிரச்னைகளை உத்தேசித்து இந்த முறை அனுசரிக்கப்படுகிறது.

                

 பயன்படுத்தும் முறையும் அளவும்:    

 

5 முதல் 10 துளிகள் நசியமிட அதாவது மூக்கில் இடும் சொட்டு மருந்தாக (நஸ்ய) பயன்படுத்தப்படுகிறது.


                 
தீரும் நோய்கள்:  


தலை, மூக்கு, தொண்டை போன்ற கழுத்துக்கு மேற்பட்ட உறுப்புகளில் தோன்றும் நோய்கள் (ஊர்த்வஜத்ருகாத ரோக), தோல் வறட்சி (த்வக்ரூக்ஷய), நரை (பாலித). தொடர்ந்து உபயோகிக்க புலன்கள் கூர்மையாவதுடன் நரையும் நீங்குகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆயுர்வேதத்தில் உயிர் நாடியான பஞ்சகர்மா என்னும் உடலை சுத்தம் செய்யும் ஐந்து வகை விஷயங்களில் நஸ்யம் என்னும் மூக்குதுளி சிகிச்சை தலைக்கு மேல் உள்ள எல்லாவகையான நோய்களுக்கும் சிறந்த ஒன்று ..இந்த பஞ்சகர்ம சிகிச்சைகளை பற்றி அடுத்து விரைவில் பார்க்கலாம் ..
  2. இந்த அணு தைலம் என்ற மருந்து மருந்து அனுதினமும் நாம் பயன்படுத்தினால் -முடி கொட்டாமல் ,முடி நரைக்காமல் ,கண் பார்வையை தெளிவாக்கி கண்ணாடி அணியாமல் ,புலன் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் கொடுத்து ,தைராய்ட் வராமல் தடுத்து ,முக சுருக்கங்களை வர விடாமல் தடுத்து என்றும் இளமையாக வைக்க உதவும் ..
  3. காலை கடமைகளில் தினமும் பல் விளக்குவது மட்டும் தான் இப்போது செய்கிறோம் (சிலர் அதை கூட செய்வதில்லை -பெட் காபி குடிக்கிறார்கள் ),ஆனால் கண்ணுக்கு அஞ்சன மை ,மூக்குக்கு எண்ணை,தலைக்கு எண்ணை வைப்பது என்று ஆயுர்வேதம் தினமும் செய்ய சொல்கிறது ..
  4. இந்த அணு தைலம் -பல தலை சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்து ..

முடி கருக்க,முடி வளர மட்டுமல்லாமல் பல நல்ல பலன்களை இந்த நஸ்ய சிகிச்சை செய்யும்
குறிப்பு -இந்த மருந்தை மூக்கில் எண்ணை விடும் -மூக்கு துளி சிகிச்சையாக -நஸ்ய சிகிச்சையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் 

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...