Saturday, 7 December 2013

குண்டா இருக்கீங்களா ? - உடல் எடை குறைய நல்ல மருந்து

குண்டா இருக்கீங்களா ? - உடல் எடை குறைய நல்ல மருந்து -நவக குக்குலு Navaka Gugglu
(ref- பைஷஜ்ய ரத்னாவளி - மேதோரோகாதிகாரம்)
தேவையான மருந்துகள்:

1.            சுக்கு சுந்தீ                                     10 கிராம்
2.            மிளகு மரீச்ச                                   10          
3.            திப்பிலி பிப்பலீ                            10          
4.            கொடிவேலிவேர் சித்ரகமூல                           10          
5.            வாயுவிடங்கம் விடாங்க                        10          
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       10          
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     10          
8.            கோரைக்கிழங்கு முஸ்தா                        10          

செய்முறை:      

இவைகளை நன்கு பொடித்துச் சலித்து சுத்தி செய்த குக்குலு (ஷோதித குக்குலு) 90 கிராம் சேர்த்துக் கல்வத்திலிட்டு திரிபலா கக்ஷாயம் விட்டு துண்ணியதாக அரைத்து 500 மில்லி கிராம் மாத்திரைகளாக்கி நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தண்ணீருடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: 


உடல் பருமன் (மேதோவ்ருத்தி (அ) ஸ்தூலதா), உடல் துர்நாற்றம் (சரீர தௌர்கந்த்ய), ஆமவாதம் (ஆமவாத), கீல்வாயு (அ) வாதம் (சந்திகாதவாத), பேராசன நரம்புவலி (க்ருத்ரஸி), நாட்பட்ட புண்கள் (புராணவ்ரண), கொப்பளங்கள், கட்டிகள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கொடம்புளி சூப்புடன் -இந்த மாத்திரையை காலை மாலை இரண்டு சாப்பிட வெகு வேகமாக எடை குறையும் ..
  2. வாரனாதி கஷாயம்  அல்லது வராதி கஷாயம் + இந்த மாத்திரையும் எடை குறைய பயன்படுத்தலாம் ..
  3. மேலே சொன்ன அனுபானம் கிடைக்காதவர்கள் ..திரிபலா கஷாயம் அல்லது  கொள்ளு கஷாயம் கூட நல்ல பலன் தரும்
  4. உடல் குண்டானதால் ஏற்படும் கால் வலி ,வாத நீர்  போன்றவற்றுக்கும் இந்த மாத்திரை வேலை செய்யும்
  5. ஆகாரத்தில் கட்டுப்பாடு ,சரியான உடல் பயிற்சியும் அவசியம் செய்யவேண்டும்

பழுக்காத கட்டிகளுக்கும் ,வலி



பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தேவதாரு தேவதாரு            50 கிராம்
2.            சுக்கு – சுண்டீ                     50          

இவைகளைப் பொடித்துச் சலித்து அத்துடன் தனியே பொடித்துச் சலித்த நவாச்சாரம் (நவக்ஷார) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
                இது நீர்க்கும் தன்மை உள்ளதாகையால் காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை:  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

                 
எலுமிச்சம் பழச்சாறு, மோர் அல்லது சூடான தண்ணீர் இவற்றுடன் கலந்து மேலே பூசலாம்.

தீரும் நோய்கள்:  

ஆரம்ப நிலையிலும், பழுக்கும் நிலையிலும் உள்ள கட்டிகள் (விஷ்போட (அ) வித்ரதி), வீக்கம் (ஸோத), வலி (ருஜா), யானைக்கால் (ஸ்லீபாத).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வீக்கம் சார்ந்த வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிடலாம் ..நல்ல குணம்  தெரியும்
  2. பழுக்காத கட்டிகளுக்கு கஞ்சி தண்ணீருடன பற்றிட சீக்கரம் உடையும்
  3. ஊசி குத்துதல் போன்ற வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிட நல்ல பலன் தெரியும்

பசியின்மையால் வருகிற நோய்

பசியின்மையால் வருகிற நோய்களுக்கு -அக்னிதுண்டீவடீ -Agni thundi vat
  (ref-பைஷஜ்யரத்னாவளி அக்னிமாந்த்யாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

I.        சுத்தி செய்த ரஸம் ஷோதிதரஸ      10 கிராம்
2.      சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக  10          

இவைகளைச் சேர்த்துக் கஜ்ஜளி செய்து அத்துடன்

1.            ஓமம் அஜமோதா                               10 கிராம்
2.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10          
3.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்10          
4.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10          
5.            கொடிவேலி வேர் சித்ரக                         10          
6.            சீரகம் ஜீரக                                     10          
7.            வாயுவிடங்கம்  -  விடங்க                       10          

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம், மற்றும் பொடித்த

II.           

 1.            ஸர்ஜக்ஷாரம் ஸர்ஜக்ஷார             10 கிராம்
2.            யவக்ஷாரம் யவக்ஷார                10          
3.            இந்துப்பு ஸைந்தவலவண            10          
4.            கல்லுப்பு ஸ்வர்ச்ச லவண            10          
5.            சோற்றுப்பு ஸமுத்ர லவண                10          
6.            பொரித்த வெங்காரம் டங்கண சூர்ண   10          
தனித்தனியே சிறிது சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சூர்ண ஆகியன மற்றும்

III.            

1.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்ஸநாபி           10 கிராம்
2.            சுத்தி செய்த எட்டிக்கொட்டை - ஷோதிதவிஷமுஷ்டி 160    
ஆகியவற்றைச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீர ரஸ) கொண்டு நன்கு அறைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் வரை வெந்நீர், எலுமிச்சம் பழச்சாறு, தேன், இஞ்சிச்சாறு அல்லது ஜீரகக் கஷாயத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  


பசியின்மை (அக்னி மாந்தியம்), செரியாமை (அஜீர்ண), ருசியின்மை (அருசி) முதலிய ஜீரணக்கோளாறுகள், பெருங்கழிச்சல் (கிராணி) மற்றும் செரியாமையின் காரணமாக ஏற்படும் காய்ச்சல் (ஆமஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. ஆமம் என்ற செரியாத நிலையால் வரும் நோய்களுக்கு இந்த மருந்தை கொடுத்து ஆரம்பித்தால் நல்ல பலன் தெரியும் ..
  2. அஜீர்ணத்தால் ஏற்படுகிற கிரகணிக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும் ..
  3. இந்த மருந்தை எனது கிளினிக்கில் கொடுத்து நல்ல பலன் கிடைத்துள்ளது ...நான் ஆமவாததிர்க்கும் இந்த மருந்தை பயன் படுத்துவதுண்டு ..

Saturday, 30 November 2013

முகப்பரு

முகப்பருக்களை ,முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை குணப்படுத்தும் -
குங்குமாதி லேபம் -Kumkumadhi Lepam
                                                                                                             
தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                          10 கிராம்
2.            மஞ்சள் ஹரித்ரா                                 5              “
3.            பாச்சோத்திப்பட்டை லோத்ராத்வக்                5              “
4.            கோரைக்கிழங்கு முஸ்தா                        5              “
5.            சித்தரத்தை ராஸ்னா                            5              “
6.            விளாமிச்சம்வேர் உசீர                          5              “
7.            குருவேர் ஹ்ரீவேர                             5              “
8.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  5              “
9.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்5              “
10.          தாழம்பூ மடல் கேதகீ புஷ்ப                      5              “
இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்து அவற்றைச் சிறு கொதி கிளம்பும் அளவிற்குச் சூடாக்கப்பட்ட 160 கிராம் நல்லெண்ணெய்யில் (திலதைல) தூவிச் சிறிது சூடாக்கிப் பின்னர் அத்துடன் தண்ணீர் 640 மில்லி லிட்டர் சேர்த்து ஒரு சிறு கொதி வருமளவிற்குச் சூடு செய்து இறக்கி நன்கு மூடிப் பத்து நாட்கள் வைக்கவும். பின்னர் சரக்குகளைப் பிழிந்தெடுத்து மணம், நிறம் இவைகளுடன் கூடிய எண்ணெய்யைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கவும். இது மூர்ச்சித தைலம்எனப்படும் பிறகு அதைச் சிறிது சூடுசெய்து பிறகு அதைச் சிறிது சூடு செய்து தேன் மெழுகு (மதுச்சிஷ்ட) 40 கிராம் சேர்த்துத் கறைந்தவுடன் வடிக்கட்டிக் கலவையைக் களிம்பு போல் உறையுமளவிற்கு ஆற வைக்கவும்
.
பின்னர் அத்துடன்
1.            சுத்தி செய்த ரஸஸிந்தூரம் ஷோதிதரஸ ஸிந்தூர 2.500 கிராம்
2.            இந்துப்பு ஸைந்தவ லவண                 5.000     “
3.            குங்குமப்பூ குங்கும                        1.000     “
4.            கோரோசனை கோரோசன                  0.125     “
5.            பச்சைக்கற்பூரம் கற்பூர                     8.000     “
6.            கஸ்தூரி கஸ்தூரி                         62.500 மில்லி கிராம்
இவைகளைத் தனித்தனியே அரைத்துப் பொடித்துப் பிறகு ஒன்று சேர்த்தரைத்துக் கலந்து சந்தன தைலம் (சந்தன தைல) 10 கிராம். அத்தர் (அத்தர்) 0.250 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  




பருக்கள் (யௌவன பிடக), மருக்கள் (நீலிகா), முகத்தில் கருமையுடனும் வேறு நிறங்களுடனும் உண்டாகும் வ்யங்கம்என்னும் வட்டங்கள், தோல் நிறமாற்றம் (வர்ணவிகார) மற்றும் முகத்தின் அழகைக் கெடுக்கும் தோல் நோய்கள் (சரும ரோகங்கள்).

               
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. முப்பருக்களை இந்த லேபம் மிகவும் சிறந்த முறையில் குணப்படுத்தும்
  2. இரத்தம் சுத்தம் செய்யும் மருந்துகள் மற்றும் ,உடல் சூட்டை குறைக்கும் மருந்துகளோடு இந்த மருந்தை பயன் படுத்தினால் நல்ல பலன் கிடக்க வாய்ப்புள்ளது

முடி கருக்க



ஜபாபத்ரியாதி தைலம் 
(செம்பருத்தியாதி தைலம்)                             (ref-ஸஹஸ்ரயோகம்)    
 செம்பருத்தி தைலம் செய்வது எப்படி  ?
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            செம்பருத்தி இலை ஜபாபத்ரி     200 கிராம்
2.            கீழாநெல்லி பூ ஆமலகீ          200        
3.            வில்வ இலை பில்வ பத்ர       200        
4.            விருட்சிப்பூ விருக்ஷிக புஷ்ப          200        
5.            அருகம்புல் தூர்வா              200        
6.            வெற்றிலை நாகவல்லி பத்ர          200        
7.            துளசி இலை துளசி பத்ர        200        
8.            ஜாதிமல்லி இலை மாலதி பத்ர  200        
9.            அவுரி இலை நீலி பத்ர          200        

இவற்றை நன்கு இடித்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய் (நாரிகேள தைல) 800 கிராம், தேங்காய்ப் பால் (நாரிகேள க்ஷீர) 800 கிராம், நன்கு விழுதாக அரைத்த

10.          அதிமதுரம் யஷ்டீ              33 கிராம்
11.          சீரகம் ஜீரக                     33          
12.          கருஞ்சீரகம் கிருஷ்ணஜீரக       33          

ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து காய்ச்சிப் பதத்தில் வடிகட்டவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சிரங்கு (பாமா), அரிப்பு (கண்டு), கரப்பான் (விஸர்ப்ப) போன்ற தோல் நோய்கள் (சர்ம ரோக), முக்கியமாக குழந்தைகளின் மேற்கூறிய நிலைகளில் மிகச் சிறந்தது. தலைப் பொடுகுக்கு (சிரகண்டு) இதனைப் பயன்படுத்துவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆயுர்வேதத்தில் செய்யபடும் இந்த செம்பருத்தி தைலமும் -சித்த முறைப்படி செய்யப்படும் செம்பருத்தி தைலமும் ஒன்றல்ல
  2. பொடுகுக்கு -துர்துற பத்ராதி தைலம் + வெட்பாலை தைலம் + இந்த தைலம் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்
  3. இந்த தைலம் -தோல் வியாதிகளிலும் நல்ல பலன் தரும்

பித்த வெடிப்பை குணமாக்கும்

பித்த வெடிப்பை குணமாக்கும் -ஸிந்தூராதி லேபம் -Sindooraadhi Lepam
                                                                                               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வங்க ஸிந்தூரம் கிரிஸிந்தூர          20 கிராம்
2.            ரஸ கற்பூரம் (பூரம்) ரஸகற்பூர        10          
3.            ரஸ ஸிந்தூரம் ரஸ ஸிந்தூர         10          
4.            மிருதார்சிங்கி ம்ருத்தார ஸ்ருங்க      20          

இவைகளை வங்க ஸிந்தூரம் நீங்கலாகத் தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் வங்க ஸிந்தூரத்தையும் சேர்த்து ஒன்றாக அறைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல  400 கிராம்
2.            தேன் மெழுகு மதுச்சிஷ்ட              100        
இவைகளைக் கொண்டு தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சேற்றுப்புண்  பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண), படை (விஸர்ச்சிகா), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), பித்த வெடிப்பு எனப்படும் கால்களிலேற்படும் பித்தவெடிப்பு (விபாடிகா), இரணம் (வ்ரண), அரிப்பு.

 தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காலில் ஏற்படக்கூடிய எல்லா வகையான வெடிப்புகள் அது பித்த வெடிப்பானாலும் ,ப்லாண்டார் சோரியாசிஸ் எனப்படும் நோயானாலும் அது இந்த மருந்தால் முற்றிலும் குணமாகும்

மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

  மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...