பனி நாட்களில் வெளிப்புற குளிர்ச்சியால் கர்ப்பப்பை சுருங்கி விரிவது வழக்கத்தை விட அதிகமா இருக்கும்.இதனால் மாதவிடாய் வலி சற்றுக் கூடுதலா இருக்கும். கடுகுஎண்ணெய் + விளக்கெண்ணெய் இரண்டையும் சேர்த்து இரும்புக் கரண்டியில் சூடு பண்ணி அடிவயிற்றில் தேய்த்து வெந்நீரால் கழுவ, கருப்பை சுருங்கி விரிவது நார்மல் ஆகும்; வலியும் குறையும்.
Saturday, 7 January 2017
மாதவிடாய் கால வலி சரியாக
மாதவிடாய் மூன்று நாள் வலிஉடலில் ஏற்படுத்தும் நோவுகள், உள்ளத்தில் ஏற்படுத்தும் சோர்வுகள் தீண்ட தகாதவர்களாக்கி திண்ணையிலேயே உட்கார வைக்கும் சமூக கட்டுப்பாடு என்னும் சவுக்கடிகள், இதுவெல்லாம் போதாதென்று, மாதவிடாய் நேரத்தில் மக ளிரின்சருமத்தில் தோன்றி காலமெல்லாம் கவலைப்பட வைக்கும் ஊறல்,அரிப்பு, செம்மேகம், கருமேகம் மற்றும் வெள்ளைப் படுதல் போன்ற நோய்கள் வேறு.மாதவிடாயை மையமாக கொண்டு பெண்கள் வாழ்விலே பெரும் புயலாய் சுழன்று அடிக்கும் இந்த சூறாவளிகள் அவர்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றி வருத்தமே வாழ் வாய் ஆக்கிவிடக் கூடியவை.முக அழகை கெடுக்கும் முகப் பருக்கள், கண்ணில் தோன்றும் கரு வளையம், உடல் உறவில் திருப்தியின்மை, அதனால் உண்டாகும் நிரந்தர பரிதவிப்பு, மன உளைச்சல், குழந்தையின்மை, இடுப்பு, தொடை, முதுகு ஆகிய பகுதிகளில் உண்டாகும் அதிகமான சூடு, தாங்க முடியாத எரிச்சல், பசியின்மை இவை யெல்லாம் மாதவிடாய் கோளாறுகள் மகளிருக்கென்ற அள்ளித் தரும் விசேஷ பரிசுகள்.இவைகளை தடுக்க தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.பெரிதுவாக எல்லாப் பெண்களுக்கும் மாதவிடாய் என்பது 28 நாட்களுக்கு ஒரு முறை வரவேண்டும். அதாவது பெண்கள் கணக்கிலே பிப்ரவரி மாதம்தான் சரியான மாதம் என்று வைத்துக் கொள்ளலாம். வழக்கமாக மூன்று முதல் ஐந்து நாட்கள் மாதவிடாய் நீடிக்கும். ஆனால் 24 நாட்களுக்கு குறைவான நாட்களில் மாதவிடாய் தொடர்ந்து வருவதோ, 45 நாட்களுக்கும் அதிகமான நாட்களுக்கு ஒரு முறை விடுவதோ, வீரிய தாது சரிவிகித மின்மையின் அடையாளமாகும். இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது.மாதவிடாய் ஒரு மாதம் தவறிப் போகிறது அல்லது தள்ளிப் போகிறது என்றாலே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். கல்யாணமாகி அப்போதுதான் கர்ப்பமான பெண்களை இங்கே சொல்ல வில்லை. அவர்களுக்கு இது சந்தோஷத்தை தரும் சமாச்சாரம்தான். ஆனால் மற்றவர்களுக்கோ நமது மருத்துவ ஆலோசனை.மாதவிடாய் அழற்சி சரியாக:பார்லி நீரை தினமும் பருகலாம். கண்டங்கத்திரிவேர், நெருஞ்சி, பூவரசம் பட்டை, சுரைக்கொடி, ஆகியவற்றை வதக்கி அதில் ஒரு பலம் அதாவது 35 கிராம் எடுத்து ஒரு படி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீர் எட்டில் ஒரு பங்காக வற்றிய பின்னர் அதை காலை, மாலை அருந்தி வருவது உடல் உஷ்ணத்தை தணிக்கும். முள்ளங்கி, வாழைத்தண்டு, பூசணி, தர்பூசணி போன்ற குளிர்ச்சி தரும் உணவு வகைகளை உண்டு வருவது காரம் அறவே நீக்கிவிடுவது அவசியம
பனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்!
பனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்!பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள் சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதை பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும். சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள என்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது.தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணாமாகும். பலவகையான சோப்புகளை பயன்படுத்துவதாலும் சரும வரட்சிக்கு காரணமாகும். எனவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் லகலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.
Friday, 22 April 2016
மனகவலை எனும் குரங்கு!
#மனகவலை எனும் குரங்கு!
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ,
" எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
குரங்கோ ,
"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது . அவர் மீண்டும் சொன்னார் ,
" பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".
அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா . குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது .
"இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
விட்டொழியுங்கள்.
சந்தோசமாய் இருங்கள்,..
Tuesday, 24 March 2015
monthly book
Tuesday, 3 March 2015
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி
தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ, மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சியையும் கொண்டு செயல்படுகிறது.
தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது. உடலிற்கு தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். சதையுடன் விதையும் பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.
தர்பூசணியை சாப்பிட மட்டுமல்லாமல், தற்போது பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். தர்பூசணி ஜுஸ், பாயசம், ஸ்வீட், ஐஸ்கிரீம் என இதில் ஏராளமான உணவுப்பொருட்களும் தயாரிக்கிறார்கள். மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தும் தொழில்நுட்பம், தர்பூசணியில் தற்போதுதான் சாத்தியமாகிவருகிறது. தர்பூசணி தென் ஆப்ரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. முதலில் எகிப்தில் அதிகளவில் பயிரிடப்பட்டது. 7ம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 10ம் நூற்றாண்டில் சீனாவிலும் தர்பூசணி அறிமுகமாகியுள்ளது. உலகில் தர்பூசணியை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இயற்கை வயக்ரா
தர்பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்தப் பழம் ஒரு இயற்கை வயாக்ரா என்பது பலருக்கும் தெரியாத உண்மை. தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளது. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் சத்துகள் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் சத்துப்பொருள், வயாக்ராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
ஆனால் பலருக்கும் இது தெரியாததால், இனிப்பான சிவப்பு பகுதியை சுவைத்தவுடன் மீதம் உள்ள தோலை அப்படியே எறிந்து விடுகின்றனர். தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது, அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு ஆசையை அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தர்பூசணியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு வெள்ளைப்பகுதியையும் மறக்காமல் சாப்பிடுங்கள். நாவுக்கு வேண்டுமானால் அப்பகுதி சுவையில்லாமல் இருக்கலாம் ஆனால் இல்லற சுவையை கூட்டுவதில் அது வயாக்ராவுக்கு சவால் விடும் பகுதி என்பதை மறந்து விட வேண்டாம்.
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!
மூளை நரம்புகளை வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !! வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரைப்...

-
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் உணவுகள்:- குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இத்தகை...
-
முடி வளர -முடி கருக்க - அணு தைலம் ( ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ஸூத்ரஸ்தானம் - நஸ்யவிதி) தேவையான மருந்துகளும் செய்முறையும்: ...
-
தைராய்ட் நோயை குணப்படுத்தும் - காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU) ( சாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட) தேவையான மருந்துகளும் செய்ம...